Tuesday, December 7, 2010


அலைகள் மீது தவழும் குமிழியாய் ,
புல் மீது யாத்திரை செய்யும் பனித்துளியாய்,
சுடும் சுற்றொடரில் வீசும் தென்றலாய் ,
உயிரிழந்த பகலுக்கு மெருகூட்டும் இசையாய் ,
அமைந்தது அந்த ஓர் இரவு !

என்னிலை புகுந்த தனிமையின் தருணத்தில்,
என்னை தன்னிலை இழக்க செய்தாய் உனது வருகையால்!
சலனமற்ற என்னில்,
எதிர்பாராத உனது ஸ்பரிசம்
ஆஹா! சஹாராவில் குளுமை போல..

உனது வருகை ,
எழுச்சிகளற்ற என் அனுதின வாழ்வில்
புத்துணர்ச்சியாய் !

மணிப்பொழுதில் நீ ஏற்படுத்திய வாசம் ,
என் பொக்கிஷ சுவாசமாய் !
தனிமையின் முடிவுரையாய் வந்தாய்,
என்னை கவலைகளை மறக்க செய்து ,
நீ இருந்த நொடிபொழுதில் மகிழ்ச்சியாக்கினாய்!

ஜடமாய் பயணித்த என் பயணத்தில் ,
வந்தாய் திடீர் விருந்தாளறாய்!
நீ ஏற்படுத்தி சென்ற மெல்லிசை உணர்வுகளை
நேசிக்கிறேன் உன் ஒவ்வொரு வருகையிலும்
என் செல்ல மழையே!!

Saturday, December 4, 2010

????


முட்கள் நிறைந்த பாதையில் ,
மலரின் பாதச்சுவடை தேடியபடியே தொடர்கிறது நம் பயணம்!
கணக்கில்லா அனுபவங்களுக்கிடையே ,
நாம் நம் வழிகளின் தேடலிலே !
பிரபஞ்சத்தின் எல்லை வரை ,
சிரகடித்துச்செல்ல கனவுகளும் உண்டு ..
சிறகுகளை நிகழ்வுகளின் சிறைகள்
தடுத்த மாயமும் உண்டு !
அன்றாட வாழ்வில்
எதிர்பாராத இழப்புகள்,
வரவேற்காத தோல்விகள் ,
புன்னகையை திருடிய கவலைகள் ,
மனக் கோவிலில் குடியேறிய குழப்பங்கள் ,
வாழ்வை எதிர் கொள்ள முடியாத தவிப்புகள் ,
ஓடிய காலத்தை எண்ணி கண்ணீர் பின்னோட்டங்கள் என
எத்தனை விதமான திருப்பங்கள் தான் இந்த வாழ்வில் ?!
அவ்வபோது சோர்ந்து போகும் உள்ளங்களே ,
நினைவிற் கொள்வோம்
பேய் மழைக்கும் இறுதி மழைத்துளி உண்டு !
அதிரும் பூகம்பத்திற்கும் நித்திரை உண்டு !
உயிரிழந்த கடிகார முள்ளிலும் மறுதுடிப்பு உண்டு !
இறப்புகள் அதிகரிப்பதால் ஜனனம் குறைந்துவிடவில்லை!
மலர்கள் உதிர்வதால் செடிகள் மறித்து போவதில்லை!
வலைகளின் எண்ணிக்கை அதிகரித்ததால் ,
மீன்களின் எண்ணிக்கை குறைவதில்லை!
நம் வாழ்வும் அப்படிதான் நம்பிக்கை இருக்கும் வரை,
நாம் நிலைகுலைவதில்லை!
நாம் சிறைகளை தடுத்து ,
வலைகளை தாண்டி,
கவலைகளை எரித்து,
புதிதாய் பிறக்கும் குழந்தையாய் அவதரிப்போம் !
திரையில் ஒளிந்திருக்கும் அழகிய வாழ்வை எதிர்கொள்ள :)


Saturday, November 20, 2010

Gonna Miss!


How it would be when you are all alone in a massive island? How it would be when you are in the street in the midnight searching for your pavement?How would you feel when you lost yourself in your dreams?With such chaotic thoughts in mind, with stupendous number of hopes, with quite large number of dreams, with loads of excitement, with the thirst of foreseeing the days ahead, the brand new day of my life started--The First day of my college life :)

In every bounce of my new experiences, in every moment of joy, in every single flash of my thoughts, in every brink of my eye i felt the nostalgia of my school life. Until that point of time i was with the thought "school days , the heart of everyone's life".. later on days got rolled off and i had a swivel of being in a most comfortable place. Its that moment wherein i got a thought "college days, the heartbeat of everyone's life"..Hurray! i started enjoying college life from there on.

Friends, the most sweetest part in everybody's vivacity. Its friends who made me glow bright all the time, Its my friends who patted me when am down, its my friends who gave me confidence to rise , its my friends who gave me courage to do fraudulent activities :P(only at times like staying out of classes), its my friends who stole my tears away,its my friends who are always right beside me. For all those who are destined to travel with me throughout my heartfelt gratitude for making me live with your presence.

Some days of college were cherishable, which gave energy to hold on..some days were adorable, which gave spark to be noted on memory lane.. some days were melancholic, which made us stronger to face odd situations..some days were victorious, which gave us moments to realize ourself.. some days were challenging, which made us know the real ourself.. Almost gone through all days in all dates of these years.

Never ending chit chats, time up lectures, frightening exams, sleeping hour , permanent shelter in canteen, outstanding classes, irregular assignments, lab time stories, record works, war provoking culturals, enjoyable games, lullaby seminars, curriculam breaking workshops everything gonna end ! change has never been without visiting anybody. Realizing it in every moment of living nowadays!

The life that gave everlasting friendships, longstanding love, memorable experiences, hard lessons for lifetime, prestigious degree for the elevation of rest of our living, the life that gave us huge number of thoughts that we never had before can never be forgotten . certain memories are pricking to remember but difficult to forget. on the other side we long for certain memories to be happening forever but we are left with the curse of the past being folded :(. Only the happenings get folded but the memories are held for lifetime. Though life keeps on taking diversions, college memories are infact kept intact. Gonna miss the most freedom centric part of life :(.
-With a desire to be in touch always..

Saturday, October 30, 2010

A girl in ur life!


A girl, the most challenging person on earth. Right from old histories a girl has been portrayed as a coward,prisoner of home,dependent and what not? In the 21st century that kind of old curtain have been folded and a new bliss in almost every deed of woman is taking place at its pace..From a coward to a bravo, prisoner of home to a flier all over world everything have transformed..A girl lovable mother for a son, most valuable daughter for a father, everlasting bond for a husband,best companion for a brother in all his joy and sorrows,best person to rely on for a friend and a most promising treasure for any individual!know her well u will get to know the silent happenings behind her.That will make u realize she is like a air which makes its presence everywhere without even a glimpse of noise around.. until now there are several sayings that a girl is always under the cover of a father,brother,friend and a husband. Its not actually so.. she is not that strong enough to see u live and struggle without the presence of her.


Know her tears behind her smile, tonnes of words behind her silence, handful of surprises beside her tone,bountiful amount of love and care behind her anger, her fear of missing u behind her fights.. challenge her at her strengths and not at her weaknesses. she can really teach u n number of lessons. Know her well!!


She can't be with u at all part of time but definitely beside you in all your moments..she can't wipe out all your past regrets but can give u a cherishable present..she may not be intelligent to the level you expect but she is brilliant enough to make you shine by being your beacon..she can't give you all the wealth that you expect but she can afford you the most priceless gift HER HEART never break it..


As a mother she can't help you always.. once you go out of the shell to face the world on your own..As a sister she can't giggle with you always once you ignore her and get a large number of people to laugh with..There are moments where she can't lay her presence with you but never ever misses even a single beat of her heart to think about you..


Need not hug her but dont crush her down to earth,.Need not hold her but don't leave her alone, she can't bear the absence of u. Need not share your thoughts with her but don't share it with an outsider, she is too posessive.Need not love her but never hate her. Need not understand her but don't assume her.Value her,trust her,cherish her, salute her, treasure her for she is your language of silence, enlightener of your thoughts, depositor of your trust and much more than that she is a most valuable soul who loves you beyond words can express...

Saturday, October 23, 2010

சமர்ப்பணமாய்..


என் பிறப்பின் போது அறியவில்லை
என் வாழ்வை உங்களோடு செலவிடுவேன் என்று !
அன்பென்னும் பெருங்கடலில் மூழ்கியதில்லை
அன்பின் முகவரியை நீங்கள் என்னுள் புகுத்தும் வரை!
என் புன்னகையை ரசித்தது இல்லை
நீங்கள் என்னோடு நகைக்கும் தருணம் வரை !
நீர்வீழ்ச்சியாய் விழும் என் கண்ணீர் துளியை எவரும் திருடியதில்லை
திருடுவதற்கு உங்கள் கரம் வரும்வரை !
தனியே துடிக்கும் என் இதயத்தின் பாரத்தை இறக்கியதில்லை
சுமைதூக்கியாய் என் வாழ்வில் நீங்கள் வரும்வரை !
என் காலச்சக்கரங்கள் அசைந்ததில்லை
என் பயணத்தில் நீங்கள் நிறைந்திருக்கும் வரை!
என் துயரத்தில் தோள் கொடுத்து ,
என் இன்பத்தில் மத்தாப்பாய் சிரித்து,
என் வெற்றியில் சூரியனாய் மெருகூட்டி,
என் தோல்வியில் சுவாசமாய் உடனிருந்து ,
என் தனிமையின் இருப்பிடத்தை தொலைக்கவைத்து,
மறைமுகமாய் ஒவ்வொரு நொடியும் என்னை நேசித்து ,
தனியே என்னை தரிசு மரமாய் வாழவிடாமல்
பூஞ்சோலையாய் வாழவைக்கும் என் நலம்விரும்பிகளை ,
இமயங்களையும் தாண்டி
நேசிக்கிறேன்

Dedicated to my brother and sisters..

Monday, October 18, 2010

ஒரு தலைக் காதல்!


ஒருவன் கொண்ட காதலும் அதனால் அவன் சந்தித்த மாற்றங்களுமே இந்த கவிதை..

உன்னை பார்த்த அந்த நொடியிலே ,
மீள முடியாமல் சிக்கினேன் உன் பார்வையின் அலைவரிசையில் !
என் இருபது வருட வாழ்வில் ஏற்படாத
ஓர் புதிய உணர்வின் வருகை என்னுள்ளே !
என்னை வினவிய படியே நகர்ந்தேன்
புதிதாய் பளிச்சிட்ட சாலையின் நடுவே ..

முற்றிலும் பதிந்த என் நினைவேட்டில்
பளிச்சிட்ட அந்நாளின் பின்னோட்டம் ..!
ஆஹா அவள் இதழ்கள்
ஓசையின்றி இசைக்கும் வீணை நரம்புகள் !
அவளது குரல்
சிலிர்க்க வைக்கும் ஸ்வரம் !
அவளது விழிகள்
அபிநயித்த கவிமொழியில் ,
வீழ்ந்தேன் அவளிடம் முற்றிலுமாய்
அவள் இதயக் கதவின் சாவியை தேடிக்கொண்டே !!

என் கற்பனைக்கெட்டாத பல கேள்விகள் என்னுள் ?!
எண்ணங்களை என்னுள் சிறைபிடித்து என்ன செய்யப்போகிறேன்
சிறகுகள் முளைத்து அவளிடம் அவைகள் பறந்தால்தான் என்ன ?
இப்படி என்னை ஊக்குவிக்கும் உள்ளுணர்வு ஒருபக்கம் ..

இடி முழக்க சப்தமாய் சிதரிடுமோ ?
மேகம் வழிமொழிந்தும் ,
மண்ணை சந்திக்க நிராகரித்த மழை ஆகிடுமோ?
அவள் சிந்தும் புன்னகை கூட திரையிட்டு கொள்ளுமோ ?
என வினாவும் மனம் மறுபக்கம் ..

புதிரான ஓர் பதிலையே அவள் அளிப்பாள் என அறிந்தும் ,
காதலை சொல்ல பிறந்த உத்வேகத்துடன் புறப்பட்டேன் ..
பலவித ஒத்திகை என்னுள்
அவளுடன்
பயணம் செய்ய
முன்னுரையாய் அமைய போகும் அந்த ஒரு வினாடி உரையாடலுக்காக !!
சரிக்கிடும் சக்கரமாய் புறப்பட்ட என் கால்கள் ,
விவேகமாய் அவள் இருப்பிடம் தேடி விரைந்தேன் ..

முகவரியை தவறவிட்ட காற்றைப்போல ,
மறைந்த மின் ஒளியை போல ,
உணர்ந்தேன் அவள் வேறிடம் சென்றுவிட்டாள்
எனக் கேட்டதும் ...

உறைந்த பாறையாய் ,
உருகிய பனிக்கட்டியாய் ,
சுவாசம் உட்கொள்ள முடியாமல் தவித்தேன் ..
வனாந்திரமாய் காட்சியளித்த சாலையில்
ஜீவனற்று பயணித்தேன் ..

சுக்குநூறாய் நொறுங்கிய என் காதல் கோட்டை
வடிவமைக்க எண்ணியும்
அவள் சென்ற திசை ,
அவள் வசிக்கும் சொர்க்கத்தின் விலாசம் ,
அவள் கைபேசி எண்
என எதுவுமே இல்லாத நிலை !

பல வருடங்களுக்கு பிறகு ....

திடீரென வீசும் புயலைப்போல ,
மின்னல் வேகத்தில் பயணிக்கும் நிழலை போல ,
சத்தமின்றி நுழையும் தென்றலை போல ,
நான் வெறித்து பார்த்த திசையிலிருந்து
மரக்கிளைகள் அசைந்தது போல
வண்ணமாய் மிதந்த அந்த இதழ்களின் அசைவுகள் எண் கண்ணெதிரில் !!!
காலங்கள் கடந்து சென்றும் ,
நிரந்திரமான மாற்றங்கள் பிறந்தும் கூட ,
சற்றும் என்னை விட்டு மறையாத அவளது பின்பம்
என் முன்னே நிஜமாய் !!
தூரத்தை கடத்திச் செல்லும் அந்த ரெயில்
அவளையும் அந்த ஒரு நொடி புன்னகையையும் கடத்திச்சென்றதே ..

மௌனமாய் உறங்கிக் கொண்டிருந்த நினைவேட்டில்
மீண்டும் ஏற்பட்ட நிகழ்வுகளின் பயணத்தில் இன்று நான் ..
அவள் எனதில்லை எனினும்
எனதே எனதான செல்ல மகளை
நொடிக்கு பலமுறை அழைக்கிறேன்
என் காதலை கேட்க தவறிய என் காதலியின் பெயரால் !!
மரித்து போன காதலேயாகினும் மறக்க முடியாத நினைவுகளில் என்றுமே நான் ..

Sunday, October 17, 2010

என் நிலை..


நிலவோடு தேய்கிறேன் ,
கனவோடு கரைகிறேன்,
உயிரோடு அஸ்தமாகிறேன்,
மெழுகோடு உருகினேன் ,
மழையோடு கலங்கினேன் ,
கண்ணீரோடு வீழ்ந்தேன் ,
காற்றோடு தவிக்கிறேன் ,
மௌனமோடு உலவுகிறேன் ,
நீ இன்றி என் நிலை இது !
நான் இன்றி உன் நிலை இனிது !
இருந்தும் கூட உன் நினைவுகளில் ஜீவிக்கிறேன்..

Tuesday, October 12, 2010

கடைசி நாளான அன்று..


அண்மையில் ஏற்பட்ட கௌதமின் மறைவிற்கு சமர்ப்பணமாய் இந்த பதிவு ...


பழைய நிகழ்வுகள் புதைந்து ,
புதிய கனவுகள் புகுந்து ,
அம்மாவின் செல்ல முத்தத்தோடு,
தந்தையின் அன்பான அரவணைப்போடு ,
தொடங்கியது அவன் வாழ்வில் மீண்டும் ஒரு நாள் !

எத்தகைய அடைமழைக்கும் இறுதி மழைத்துளி உண்டு ,
பளிச்சென வெளிச்சமூட்டும் பகலுக்கும் இரவு உண்டு ,
குலுங்க குலுங்க சிரிக்கும் சிரிப்பிலும் ஒருதுளி கண்ணீராது உண்டு ,
ஏன் இப்படி கடவுளின் ஒவ்வொரு படைப்பிலும் ஓர் இறுதி ?!!

மகனின் வருகையை காத்திருந்த பெற்றோர் ,
தோழனின் கரத்தை பிடிக்க எண்ணி காத்திருந்த நண்பர்கள்,
பலகோடி சிந்தனை செதுக்கள்களுடன் இருந்த அவனது மனம் ,
இப்படி எதையுமே பொருட்படுத்தாமல்
கண் சிமிட்டும் மணிப்பொழுதில் நடந்த அந்த அகோர விபத்து
எதிர்பாராமல் அவன் வாழ்வின் கடைசி நாளாய் அந்நாள் :(
உயிரை இறுக்கி நெருக்கிய கடைசி நிமிடங்கள் ,
சுவாசத்திற்கு சிக்காமல் சீறிச் சென்ற காற்று ,
உறைந்து போய் உதவ மறுத்த மனிதர்கள் ,
பல நாள் கூடவே ஓடிய வாகனம்
கையை விட்டு ஓடிய அவலம் ,
இப்படி அனைத்தும் அவனுக்கு கைகொடுக்காத நிலை !

உறங்காமல் வளர்த்த பெற்றோரின் வலி ,
விரல் தொட்டு விளையாடிய சகோதரர்களின் ஏக்கம் ,
உயிருக்கு உயிராய் இருந்த நண்பர்களின் கண்ணீர் ,
அவன் நின்ற இடம் தொட்டு நினைவோடு சருகிச் செல்லும் காலம் ,
இவையனைத்திற்கும் கடவுளின் பதில் தான் என்ன ?!

விழிவிளிம்பில் விழுகின்ற கண்ணீர் சப்தம் ,
மனக்கூண்டில் வந்து வந்து போகும் அவனது புகைப்படம் ,
செவியின் வாசலில் அவன் பேசிய சொற்களின் ஒலி,
இப்படி உயிரில்லா உணர்வுகளை கொடுத்துவிட்டுச் சென்றாயே !

உன்னோடு உறவாடிய நினைவுப்பந்தலில்
இன்று அனைவரும் உலவுகிறோம்..
உனது உயிர் பிரிந்தது எனினும்
அனைவரின் உள்ளங்களில் ,
உயிர் தோழனாய் ,
ஆசை மகனாய் ,
பிடித்த மாணவனாய்,
நல்ல ஆன்மாவாய் என்றுமே வாழ்கிறாய்..!

Saturday, October 9, 2010

நீ எனதாக !


விண்மீனாக ஆசைப்படுகிறேன்,
எந்நேரமும் உன்னை பார்த்து கண் சிமிட்ட!
தென்றலாக வேண்டுகிறேன்,
உன்னை அனுமதியின்றி தழுவும் அந்த உரிமைக்காக!
மழைத்துளியாக தவிக்கிறேன்,
உன் கரங்களில் என்னை நீ சேமிக்கும் அந்த ஒரு நொடிக்காக!
சாலையாக எண்ணுகிறேன்,
உன் பாதச்சுவடுகளின் பிறப்பை என் மீது ஏற்க!
பூவாக பூக்க நினைக்கிறேன்,
நீ பறித்து முத்தமிடும் உரிமையை எனக்கே சொந்தமாக்கிக்கொள்ள!
காகிதமாக தவிக்கிறேன்,
நீ எழுதும்போதெல்லாம் உன் முகத்தின் அழகை என் மீது பதிக்க!
மேகத்தால் திரையிடப்பட்ட வானமாய் இருக்க ஆசைப்படுகிறேன்,
ஒரு முறையாது நீ அறியாமலே உன் எண்ணங்களை திருடிச் செல்ல!
நீ எனதாகவே இருக்க போராடுகிறேன்
நீயும் நம் நினைவுகளும் என்றுமே எனதாகவே இருக்க !

Wednesday, September 29, 2010

நம் நட்பு


காரிருள் சூழ்ந்த பொழுதிற்கு ,
ஒளியேற்றிய சூரியனாய் ..
அசைவின்றி அயர்ந்த பொய்கையை ,
எழுப்பிய முதல் கல்லாய் ..
கற்களை செதுக்கிய சிற்பிக்கு ,
வடிவம் கொடுத்த உருவமாய் ..
மேகத்தின் சுமையை குறைத்த,
முதல் மழைத்துளியாய் ..
கருப்பு வெள்ளை படலம் கொண்ட வானத்திற்கு ,
வண்ணங்களை சேர்த்த வானவில்லாய் ..
உறைந்த நேரத்தை கடத்திச் செல்லும்
கடிகார முள்ளாய்..
உதிர்ந்த பூக்களை அரவணைக்கும்
பூமியாய் வந்தாய் என் வாழ்வில் மெல்லிசையாய் !
என் புன்னகையின் ரசிகனாய் ,
என் அழுகையின் எதிரியாய் ,
என் தேடல்களின் துணையாய் ,

என் புலம்பல்களுக்கு செவியாய்,
நான் அறியாத உலகிற்கு விழிகளாய் ,
என் இதயத்திற்கு உயிராய் ,
என் வாழ்வின் இறுதிவரை நீ வேண்டும் நட்பாய்..
ஒவ்வொரு நிமிடமும் பொக்கிஷமாகும்
நம் நட்பின் பயணத்திலே இன்று !
இன்று மட்டும் அல்ல என்றென்றுமே !!

Monday, August 23, 2010

சாலையோர காகிதம் !


தினம் தினம் பலகோடி காகிதங்களை சாலையில் காண்கிறோம் ,
என்றுமே அதனை நாம் சிந்திக்க தவறிவிடுவோம் ..அதனை பற்றிய கவிதை தான் இது ,

கைகளில் சிறையாய்,
காலடியில் சருகாய் ,
குப்பையில் ஜடமாய் ,
இருக்கும் காகிதத்தில் உள்ள உயிர் தான் என்ன ?!

விழியில் தொடங்கி ,
வழியில் முடிந்த
காதல் காவியமாக கூட இருக்கலாம் !
தினம் தினம் சேகரித்த காதல் ,
இன்று பறக்கும் காகிதமாய் ,
பறக்கும் திசை தெரியாமல் சாலையில் !!

நண்பனின் கையெழுத்தை ,
பொக்கிஷமாய் சேகரித்த முத்தாய் கூட இருக்கலாம் !
அருகாமை தான் என்றும் கிடைப்பதில்லை
அவன் செதுக்கிய எழுத்துக்களையாது சேகரிக்க
எண்ணிய மனதின் வலி தான் என்னவோ?!

இயற்கையின் துணையில் ,
காற்றின் வீச்சில் ,
காகிதத்தை நனைத்த மழையை
அன்போடு இழுக்கும் சூரியனின் சக்தியில் ,
காகிதம் ஓவியமாகவே இருப்பிடம் செல்ல வேண்டுகிறேன் !
சென்றாலும் செல்லாவிட்டாலும் ,
இருப்பது சாலையாகினும், குப்பைத்தொட்டியாகினும் ,
நம் மனதின் எண்ணங்களை என்றுமே கொட்டும்
அந்த காகிதம் என்றுமே ஓவியம் தான் !!

Wednesday, July 21, 2010

பிரிவு



பிரிவை எண்ணி வருந்திய வேளையில் தோன்றிய கவிதை தான் இது .. வசந்த காலமான இந்த அழகிய வாழ்வுக்கு பின்னால் தோன்றும் உணர்வுகள் தான் இவை :(


எங்கோ பிறந்தோம் ,
எங்கோ வளர்ந்தோம் ,
கல்லூரி என்னும் பாலத்தில் நண்பர்களாய் இணைந்தோம்..
மகிழ்வை பகிர்ந்து கொண்டோம் ,
இன்று பிரிவையும் பகிர்கிறோம் :(..
வசந்தம் மட்டுமே வந்த பாதையில் ,
பிரிவு என்னும் புயலும் வீசுகிறது ..
கசக்கும் நினைவுகளை இதயத்தில் பதிக்கிறதே!
ஒன்றாய் சென்றோம் ,
இமைக்க நேரம் இன்றி சிரித்தோம் ,
கை கோர்த்து பயணித்தோம் ,
வண்ணத்து பூச்சிகளாய் பறந்தோம் ,
உணவுகளை பகிர்ந்தோம் ,
உணர்வுகளையும் பகிர்ந்தோம் ,
இணை பிரியாத உறவுகள் ஆனோம் ..
அழகிய தருணங்களை ஏற்படுத்திய கடவுள்,
ஏனோ பிரிவையும் வாழ்வின் அங்கமாய் வடிவமைத்துவிட்டார்.
கல்லூரி வாழ்வின் கடைசி நாளான அன்று ,
இலையுதிர் காலமென
இயம்பக் கேட்டதுண்டு
மரங்களே உதிர்ந்திடும்
மாயமும் கண்டோம் அன்று ...
இனி எக்கணம் சந்திப்போமோ
எவ்வண்ணம் சந்திப்போமோ ?
நினைவுத்தென்றல் வீசுகையிலெல்லாம் ,
வருடும் ஒவ்வொரு காற்றின் ஸ்பரிசத்திலும்
நினைவுகூர்ந்து கொண்டே தான் இருப்போம்
பழைய காற்றின் நினைவுகளை !
பிரிவை ஏற்க மனமில்லை
எனினும் வாழ்வை ஏற்பதை விட வேறு வலி இல்லை..
நினைவுகளின் பயணத்தில் என்றுமே மங்காத புன்னகையுடன்
!

Tuesday, May 25, 2010

சுகமான வலிகள் ..


இன்பங்களை ஏற்படுத்தி தந்தது நீ தான் ,
மனவலிகளை கொடுத்ததும் நீ தான் ,
முட்களின் வலி கொடியது தான் ..
எனினும் ஒரு போதும் ரோஜா அதை பிரிய நினைத்ததில்லை !!
வலிகளை மறக்க நினைக்கிறேன் முடிவதில்லை :(
வலிகளை மட்டும் தான் உன்னை அல்ல !!
இன்பங்களை சேகரித்த நினைவேட்டில் ,
என் விழிகளை நனைத்த இந்த வலிகளையும்
கூட சேகரிக்கிறேன்..
நீ தந்த வலிகள் கூட சுகம் தான் என்பதற்கு சாட்சியமாய் ..!

Thursday, April 22, 2010

எனக்காய் !!


என் தோழி என்னை பற்றி எழுதிய கவிதை.. மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது இதனை பார்த்து.. அருமையாக கவிதை எழுதுவாள்.. காகிதங்களில் மட்டும் அல்லாமல் அதனை ப்ளாக்- லயும் சேகரிக்க எண்ணினேன் ... இதோ அந்த கவிதை ...

சுபமே !
உன்னை பற்றி கவிதை எழுதி கேட்டாய்
விரிந்து கிடக்கும் வானத்தை
பற்றி எழுத நான் ஒன்றும் கம்பன் அல்ல!
எனினும் எழுத முயற்சிக்கிறேன் ..
வார்த்தைகளை தேடி கொண்டே !

உன்னை முதல் முதலில் பேருந்தில் தான்
சந்தித்தேன் ..
அப்போது புரியவில்லை நீ
என் வாழ்க்கை பயணத்திலும் வருவாய் என்று !

உன்னை பார்த்து வியந்த நிமிடங்கள் சில
உன்னை பார்த்து மகிழ்ந்து நகைத்த நிமிடங்கள் பல ..
வியந்த நிமிடங்கள் ..
பலர் உன் பேச்சிற்காக புகழ்ந்த போது ..
ஏன் நானும் கூடத்தான் !!
நகைத்த நிமிடங்கள் ...
உன் செல்ல குறும்புகளின்
நகைச்சுவை பந்தியில் !!

உன் கண் அசைவுகளில்
உணர்ந்தேன்
உன் தனிமைகளை ,
இனிமைகளை ,
உன்னை இறுதியில் !!

உன்னை இறுதியில் அறிந்தாலும்
இறுதி வரையில் உன்னுடன் இருப்பேன்
இறுதி வரை என்றால் என் இறுதி வரை !!

உன் திருமணத்தை பார்க்க
ஆசை என்று கூற மாட்டேன் !
ஆனால் உன் பேத்தியின் கல்யாணத்திலும்
உன்னை பார்க்க ஆசை ...

என் ஆசை நிறைவேறும்
நிச்சயமாக ..
அதுவரை சுகமாய் இருக்க
என் சுபத்திர்க்கு !!

நட்பு


இந்த கவிதை அன்பு பரிசாய் என் நண்பன் அழித்தது.. இது அவன் சொந்த படைப்பு இல்லை எனினும் பிடித்தது ..

மூன்று எழுத்தில் மனசும் மனசும் பேசி கொண்டல்
வார்த்தை கிடையாது .
முகம் பார்க்காமல் பேசும் நட்புக்கு
பிரிவு கிடையாது ..

உறவை நேசிப்பதை விட
உள்ளத்தை நேசித்து பார்
நீ நேசிக்கும் உள்ளம் கோபம்
கொண்டாலும் சுகமாக தோன்றும் ..

உயிருக்கு உயிராய் இருந்து
உயிரை வாங்கும் காதலை விட
உயிருக்கு உயிராய் இருந்து
உயிர் கொடுக்கும் நட்பு மேலானது ..

நான் உனக்கு உயிர் தோழனாக
இல்லாமல் இருக்கலாம் ,
ஆனால் என் உயிர் உள்ளவரை
நல்ல தோழனாக இருப்பேன் ...

Friday, April 2, 2010

என்றும் மறப்பதில்லை !



ஒவ்வொரு மனுஷனோட வாழ்க்கை யிலும் கடவுள் நட்பு , காதல் , சொந்தங்கள் அனைத்தையும் செதுக்க மறந்ததில்லை .. உயிரே உறவுகள் தான் என்று என்னும் வேளையில் பிரிவை கொடுக்கவும் கடவுள் மறந்ததில்லை ..பிரிவின் வலி கொடியது தான் அந்த பிரிவிலும் நினைவுகளின் தாக்கம் என்றுமே சுகம் தான் .. வாழ்வின் பயணத்தை பற்றி எண்ணி கொண்டிருந்தேன் அப்போது தோன்றிய கவிதை தான் இது ..

பாலமிட்ட உறவுகளை புயல் அடித்தாலும் ,
பாலம் அமைத்த நினைவுகளை எதுவாலும் அழிக்க முடியாது !
செல்லக் கனவுகளை விழித்ததும் மறந்தாலும் ,
கனவின் பாதச்சுவடை மனம் மறக்க முடியாது !
இளமை கால நிகழ்வுகளை காலம் கடத்தி சென்றாலும் ,
நாடி உள்ளவரை சிறு நிகழ்வையும் கூட நினைவு கூறாமல் இருக்க முடியாது!
எண்ணச் சிறகுகளை எவர் வெட்டி போட்டாலும் ,
விழிகளின் கவி மொழியை எவராலும் அசைக்க முடியாது !
பிரிவு பரிவு காட்ட தவறி ,
நேசித்த உறவுகளை பிரிக்க தவறவில்லை ...
எனினும் அன்பை வானமாய் விரித்துள்ளோம்
என்றோ ஒரு நாள் எங்காவது சந்தித்து விடுவோம் என்ற நம்பிக்கையில் !!
சுனைநீராய் இருந்த வாழ்க்கை ,
பாலைவானமாய் காட்சியளிக்கிறதே !
நினைவோடு உறவாடி நெடுநேரம் பேசிவிட்டேன் ,
நினைவுகளை நினைக்க மறந்தாலும் ,
மறக்க நினைத்ததில்லை ..
மரித்தாலும் மறக்கபோவதில்லை !!

Sunday, March 14, 2010

விடியலின் தேடலில்


அனுதின வாழ்வின் அங்கமாகிவிட்ட துயரம் ,
புன்னகையை மறந்த இதழ்கள் ,
கண்ணீர் துளியை சேகரித்த விழிகள் ,
இரண்டும் நடத்தும் நாடக விழாவில்
உணர்ச்சிகளற்ற உயிராகவே ஆனேன் ஓர் நாள் !
கதறி அழுக தோன்றும்
எனினும் விட்டில் பூச்சியாக புன்னகைக்கிறேன்
புன்னகையில் ஒளிந்திருக்கும் கண்ணீரை யார் அறிவாரோ ?
வாழ்வின் இலையுதிர் காலம் இவை தானோ ?!
மறுபடியும் தழைப்பது எப்போதோ ?
நொடிகளின் அசைவில் அடிகள் அதிகரித்தன ,
எனினும் அதனில் வீழ்ந்து விடவில்லை ,
நிரந்தரமான விடியலின் தேடலில்
என்றுமே நான் நானாகவே !!

Saturday, February 6, 2010

என்றும் அழியாத காதல் !


என் கண்கள் ஏங்கியும்
விழிக்கமுடியவில்லை,
நெடுநீள பயணம் முடிவடைந்ததேனோ ?!
உறக்கத்திலே தொலைந்ததும் ஏனோ ?!
கனவுகள் உறைந்ததை உணர்ந்தேன் ,
உணர்ச்சிகள் செயல் இழந்ததை உணர்ந்தேன் ,
எனினும் நினைவுகளின் உயிரோட்டம் என்னுள்ளே!!
அய்யோ..
நான் நித்தமும் மூழ்கிய உன் மூச்சில்
இனி மூழ்க முடியாமல் போனதேனோ ?!
உன் கரங்களின் செல்ல சிறையில் ,
இனி பயணிக்க முடியாததேனோ ?!
உன் மார்பில் உறங்கிய தூக்கத்தை தொலைத்து ,
நிரந்தரமாய் தூங்கிய அவலம் ஏனோ ?!
என் இயலாமையையும் மீறி ,
என் காதலை சொல்ல தவித்தேன் ,
சொல்ல மறந்த காதல் ஆனதேனோ ?!
கண்ணில் நிறைந்த ஏக்கம் ..
நெஞ்சில் நிறைந்த உனது தாக்கம்..
இறுதி துடிப்பில் நிறைந்த உனது சுவாசம் ,
என் இறுதி பொக்கிஷமாய் !!
இறந்தேன் நிரந்திரமாய் ,
வாழ்வேன் உன்னில் நிரந்திரமாய் ,
மறித்தும் காதலிக்கிறேன் உன்னை ,
இன்னும் வாழ்கிறாயே என்னுள் !!

Saturday, January 9, 2010

நினைவுகள்


நடந்து சென்ற பாதை
நீண்டு கொண்டேயிருக்கிறது,
முடிவில்லாமல் ...

நாம் பேசி சிரித்த
நொடிகளுக்கு சாட்சியாய்
நின்ற மரங்கள் !
அதனிடமும் மௌனம் ?!!

நாம் அமர்ந்த சாலையோர இருக்கைகள் ,
நான் தனியே வருவேன்
என அறிந்ததோ என்னவோ?!
அதிலும் ஒரு சேதம் !
நீ இன்றி தனித்து வந்த வருகையை
சற்றும் எதிர்பார்க்காத இருக்கை!!

நாம் சென்ற பாதையில்
நம் சுவாசம் நிறைந்த காற்றில்
இன்று ஒரு வெறுமையை கண்டேன் !
காற்றும் கூட உன் தேடலில்தான்
சுற்றித்திரிகிறது ஓயாமல் !!

நாம் சென்ற போது
இசையை ஒலித்த
பறவைகளின் சப்தம் ,
இன்று அவைகள் கூட
என் செவியில் சோகமாய் !
யாருக்கு தெரியும்?
அந்த பறவைகளின் பேச்சு கூட
நம்மை பற்றியதாக இருக்கலாம் ?!

உன் பார்வை காட்டிய பரிவு,
உன் அன்பில் நனைந்த கோவம்,
உன் புன்னகையில் நிறைந்த உன் மொழிகள் ,
உன்னை என் நிழலாய்
உணர வைத்த உன் காதல்,
அனைத்தையும் எண்ணி கரைந்த நொடிகள்
நொடிகள் மட்டும் அல்ல கண்ணீரும் கூடதான்!

வெகு தொலைவில் ,
வானம் முடியும் புள்ளியில் ,
மறைந்து போனது பகல் ,
உன்னைப் போலவே!!
முடிந்து போன நம் பயணம் ஒரு பக்கம் ,
தொடர்ந்த உன் நினைவுகள் மறுபக்கம் !
இன்றும் உன் நினைவுக
ளில்..
என்றும் முடிவடையாத பயணமாய் !

Wednesday, January 6, 2010

பிடித்தவைகள் !



காலை நேர பறவைகளின் கூக்குரல் பிடிக்கும் ,
குளிரில் இதமான சூரியனின் ஸ்பரிசம் பிடிக்கும்,
புல்வெளியில் கண்ணயர பிடிக்கும் ,
பனித்துளியை பார்த்து கொண்டே இருக்க பிடிக்கும் ,
உதிரும் பனியில் சூடாய் தேநீர் அருந்த பிடிக்கும் ,
மெல்லதளுவும் காற்றின் வருடல் பிடிக்கும் ,
வெள்ளம் போல கொட்டும் அருவியில் நிற்க பிடிக்கும் ,
கடலில் கால் நனைக்க பிடிக்கும் ,
பௌர்ணமி நிலவை இமைக்காமல் ரசிக்க பிடிக்கும் ,
நட்சத்திரங்கள் கண்ணடிப்பது பிடிக்கும் ,
மழலையின் கொஞ்சும் பேச்சு பிடிக்கும் ,
சிறு குழந்தையின் வருடல் பிடிக்கும் ,
கொட்டும் மழையில் தனியாக நனைய பிடிக்கும் ,
மழையில் நனைந்ததற்கு அம்மாவின் ,
கோபம் கலந்த அன்பு சிணுங்கள் பிடிக்கும் ..
தனிமையில் இசையின் அரவணைப்பு பிடிக்கும் ,
தவறாமல் வரும் நினைவுகளின் வருகை பிடிக்கும் ,
வெட்டவெளியில் ஊஞ்சலாட பிடிக்கும்,
பேசி கொண்டே இருக்க பிடிக்கும் ,
சில தருணங்களில் மௌனம் பிடிக்கும் ,
மௌனத்தின் ஆதிக்கத்தில் கவிதை எழுத பிடிக்கும் ,
நண்பர்களின் அருகாமை பிடிக்கும் ,
நேசிக்கும் உறவுகளின் அன்பு தொல்லை பிடிக்கும்,
உயிரான உறவுகளிடம் கோபம் கூட பிடிக்கும் ,
எனக்கு பிடித்தவைகளை (ப)பிடிக்கும்,
அணைத்து இதயங்களையும் பிடிக்கும் !!