Saturday, October 23, 2010

சமர்ப்பணமாய்..


என் பிறப்பின் போது அறியவில்லை
என் வாழ்வை உங்களோடு செலவிடுவேன் என்று !
அன்பென்னும் பெருங்கடலில் மூழ்கியதில்லை
அன்பின் முகவரியை நீங்கள் என்னுள் புகுத்தும் வரை!
என் புன்னகையை ரசித்தது இல்லை
நீங்கள் என்னோடு நகைக்கும் தருணம் வரை !
நீர்வீழ்ச்சியாய் விழும் என் கண்ணீர் துளியை எவரும் திருடியதில்லை
திருடுவதற்கு உங்கள் கரம் வரும்வரை !
தனியே துடிக்கும் என் இதயத்தின் பாரத்தை இறக்கியதில்லை
சுமைதூக்கியாய் என் வாழ்வில் நீங்கள் வரும்வரை !
என் காலச்சக்கரங்கள் அசைந்ததில்லை
என் பயணத்தில் நீங்கள் நிறைந்திருக்கும் வரை!
என் துயரத்தில் தோள் கொடுத்து ,
என் இன்பத்தில் மத்தாப்பாய் சிரித்து,
என் வெற்றியில் சூரியனாய் மெருகூட்டி,
என் தோல்வியில் சுவாசமாய் உடனிருந்து ,
என் தனிமையின் இருப்பிடத்தை தொலைக்கவைத்து,
மறைமுகமாய் ஒவ்வொரு நொடியும் என்னை நேசித்து ,
தனியே என்னை தரிசு மரமாய் வாழவிடாமல்
பூஞ்சோலையாய் வாழவைக்கும் என் நலம்விரும்பிகளை ,
இமயங்களையும் தாண்டி
நேசிக்கிறேன்

Dedicated to my brother and sisters..

3 comments: