Sunday, May 20, 2012

கனவு

சிறு குழந்தைக்கு 
நடப்பது என்ன என்று புரியாத 
புதிர் கனவு..!

மீண்டும் பெற முடியாத நினைவுகளை 
சுமக்கும் மனிதனுக்கு,
ஏமாற்றம் கனவு..!

நெஞ்சம் நெகிழ்ந்து காதலிக்கும் மனிதனுக்கு,
ஸ்வாரஸ்யம் கனவு..!

எடுத்ததையெல்லாம்  உருவகபடுத்த 
முயற்சிக்கும் பார்வையற்றவனுக்கு,
எண்ணக்கோட்டை கனவு..!

வறுமை தன்  வீட்டு கதவு தட்டாத 
பணக்காரனுக்கு,
நாடகமேடை கனவு..!

ஒரு ஜான் வயிற்றுக்காய்
போராடும் ஏழைக்கு ,
ஏக்கம் கனவு..! 

தன் குழந்தையின் வருகைக்காய்
காத்திருக்கும் கர்ப்பிணி தாய்க்கு,
எழுச்சி அலை கனவு..!

வாழ்க்கை பந்தயத்தில் 
ஓடத் தயாராய் இருக்கும் இளைஞனுக்கு,
ஊக்கம் கனவு..!

எண்ணங்களாய்,
நினைவுகளாய்,
நிகழ்வுகளாய்,
ஸ்பரிசமாய் வரும் கனவுக்காய் நானோ ஏங்கி நிற்கிறேன்!
என் நிகழ கால கசப்பில் இருந்து,
ஒரு பொழுதாது சுதந்திரம் பெற்று ,
சிறகுகளாய் முழைத்து பறவையாய் பறப்பதற்காய்..! 

Wednesday, May 2, 2012

நித்தமும் பலமுறை கூறுவாய்
என்னை நன்கு படித்தது நீ மட்டுமே என்று!
ஆனால் நானோ,
என்னை நீ அறிந்தது அவ்வளவு தான் என்று எண்ணுவேன்!
நான் சிரித்து மட்டுமே பார்த்திருக்கிறாய்
நொடிக்கு கண் சிமிட்டுவது பழக்கமானது போல்,
கண்ணீரிலும் சிரிப்பது பழக்கமாகிவிட்டது!
ஏன் சோக குரல் என்று நீ கேட்கும் ஒவ்வொரு முறையும்,
தெரியவில்லை என்பதே என்
பதிலாய் இருந்திருக்கும்
ஆனால் அதற்கு பின் ஆயிரம் இருப்பது உனக்கு தெரியவில்லை!
இன்னுமா என்னை நினைத்து கொண்டிருக்கிறாய் ?
என்று வினவும் உன் விழிகள் ஒரு பக்கம்,
நான் என்ன பைத்தியமா என்று விடையளிக்கும்
என்
விழிகள் மறுபக்கம்!
இந்த வினா விடை பரிமாற்றத்தில்
அழகாய் நாடகம் ஆடிய என்
விழிகள்
முதல் முறையாய் கண்ணீரை வென்று விட்டோம் என்ற பெருமிதத்தில்!
என்னை நீ நன்கு படித்திருந்தால்,
என்னை விட்டு சென்றிருக்கமாட்டாய்!
விழிகள் நடித்து விட்டன
ஆனால் இதையமோ ஒவ்வொரு துடிப்பிலும்
கேட்கிறது மீண்டும் மகிழ்ச்சியாய் துடிப்பது எப்போதென்று?!

Harry :)