Thursday, April 22, 2010

எனக்காய் !!


என் தோழி என்னை பற்றி எழுதிய கவிதை.. மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது இதனை பார்த்து.. அருமையாக கவிதை எழுதுவாள்.. காகிதங்களில் மட்டும் அல்லாமல் அதனை ப்ளாக்- லயும் சேகரிக்க எண்ணினேன் ... இதோ அந்த கவிதை ...

சுபமே !
உன்னை பற்றி கவிதை எழுதி கேட்டாய்
விரிந்து கிடக்கும் வானத்தை
பற்றி எழுத நான் ஒன்றும் கம்பன் அல்ல!
எனினும் எழுத முயற்சிக்கிறேன் ..
வார்த்தைகளை தேடி கொண்டே !

உன்னை முதல் முதலில் பேருந்தில் தான்
சந்தித்தேன் ..
அப்போது புரியவில்லை நீ
என் வாழ்க்கை பயணத்திலும் வருவாய் என்று !

உன்னை பார்த்து வியந்த நிமிடங்கள் சில
உன்னை பார்த்து மகிழ்ந்து நகைத்த நிமிடங்கள் பல ..
வியந்த நிமிடங்கள் ..
பலர் உன் பேச்சிற்காக புகழ்ந்த போது ..
ஏன் நானும் கூடத்தான் !!
நகைத்த நிமிடங்கள் ...
உன் செல்ல குறும்புகளின்
நகைச்சுவை பந்தியில் !!

உன் கண் அசைவுகளில்
உணர்ந்தேன்
உன் தனிமைகளை ,
இனிமைகளை ,
உன்னை இறுதியில் !!

உன்னை இறுதியில் அறிந்தாலும்
இறுதி வரையில் உன்னுடன் இருப்பேன்
இறுதி வரை என்றால் என் இறுதி வரை !!

உன் திருமணத்தை பார்க்க
ஆசை என்று கூற மாட்டேன் !
ஆனால் உன் பேத்தியின் கல்யாணத்திலும்
உன்னை பார்க்க ஆசை ...

என் ஆசை நிறைவேறும்
நிச்சயமாக ..
அதுவரை சுகமாய் இருக்க
என் சுபத்திர்க்கு !!

No comments:

Post a Comment