Thursday, April 22, 2010

எனக்காய் !!


என் தோழி என்னை பற்றி எழுதிய கவிதை.. மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது இதனை பார்த்து.. அருமையாக கவிதை எழுதுவாள்.. காகிதங்களில் மட்டும் அல்லாமல் அதனை ப்ளாக்- லயும் சேகரிக்க எண்ணினேன் ... இதோ அந்த கவிதை ...

சுபமே !
உன்னை பற்றி கவிதை எழுதி கேட்டாய்
விரிந்து கிடக்கும் வானத்தை
பற்றி எழுத நான் ஒன்றும் கம்பன் அல்ல!
எனினும் எழுத முயற்சிக்கிறேன் ..
வார்த்தைகளை தேடி கொண்டே !

உன்னை முதல் முதலில் பேருந்தில் தான்
சந்தித்தேன் ..
அப்போது புரியவில்லை நீ
என் வாழ்க்கை பயணத்திலும் வருவாய் என்று !

உன்னை பார்த்து வியந்த நிமிடங்கள் சில
உன்னை பார்த்து மகிழ்ந்து நகைத்த நிமிடங்கள் பல ..
வியந்த நிமிடங்கள் ..
பலர் உன் பேச்சிற்காக புகழ்ந்த போது ..
ஏன் நானும் கூடத்தான் !!
நகைத்த நிமிடங்கள் ...
உன் செல்ல குறும்புகளின்
நகைச்சுவை பந்தியில் !!

உன் கண் அசைவுகளில்
உணர்ந்தேன்
உன் தனிமைகளை ,
இனிமைகளை ,
உன்னை இறுதியில் !!

உன்னை இறுதியில் அறிந்தாலும்
இறுதி வரையில் உன்னுடன் இருப்பேன்
இறுதி வரை என்றால் என் இறுதி வரை !!

உன் திருமணத்தை பார்க்க
ஆசை என்று கூற மாட்டேன் !
ஆனால் உன் பேத்தியின் கல்யாணத்திலும்
உன்னை பார்க்க ஆசை ...

என் ஆசை நிறைவேறும்
நிச்சயமாக ..
அதுவரை சுகமாய் இருக்க
என் சுபத்திர்க்கு !!

நட்பு


இந்த கவிதை அன்பு பரிசாய் என் நண்பன் அழித்தது.. இது அவன் சொந்த படைப்பு இல்லை எனினும் பிடித்தது ..

மூன்று எழுத்தில் மனசும் மனசும் பேசி கொண்டல்
வார்த்தை கிடையாது .
முகம் பார்க்காமல் பேசும் நட்புக்கு
பிரிவு கிடையாது ..

உறவை நேசிப்பதை விட
உள்ளத்தை நேசித்து பார்
நீ நேசிக்கும் உள்ளம் கோபம்
கொண்டாலும் சுகமாக தோன்றும் ..

உயிருக்கு உயிராய் இருந்து
உயிரை வாங்கும் காதலை விட
உயிருக்கு உயிராய் இருந்து
உயிர் கொடுக்கும் நட்பு மேலானது ..

நான் உனக்கு உயிர் தோழனாக
இல்லாமல் இருக்கலாம் ,
ஆனால் என் உயிர் உள்ளவரை
நல்ல தோழனாக இருப்பேன் ...

Friday, April 2, 2010

என்றும் மறப்பதில்லை !



ஒவ்வொரு மனுஷனோட வாழ்க்கை யிலும் கடவுள் நட்பு , காதல் , சொந்தங்கள் அனைத்தையும் செதுக்க மறந்ததில்லை .. உயிரே உறவுகள் தான் என்று என்னும் வேளையில் பிரிவை கொடுக்கவும் கடவுள் மறந்ததில்லை ..பிரிவின் வலி கொடியது தான் அந்த பிரிவிலும் நினைவுகளின் தாக்கம் என்றுமே சுகம் தான் .. வாழ்வின் பயணத்தை பற்றி எண்ணி கொண்டிருந்தேன் அப்போது தோன்றிய கவிதை தான் இது ..

பாலமிட்ட உறவுகளை புயல் அடித்தாலும் ,
பாலம் அமைத்த நினைவுகளை எதுவாலும் அழிக்க முடியாது !
செல்லக் கனவுகளை விழித்ததும் மறந்தாலும் ,
கனவின் பாதச்சுவடை மனம் மறக்க முடியாது !
இளமை கால நிகழ்வுகளை காலம் கடத்தி சென்றாலும் ,
நாடி உள்ளவரை சிறு நிகழ்வையும் கூட நினைவு கூறாமல் இருக்க முடியாது!
எண்ணச் சிறகுகளை எவர் வெட்டி போட்டாலும் ,
விழிகளின் கவி மொழியை எவராலும் அசைக்க முடியாது !
பிரிவு பரிவு காட்ட தவறி ,
நேசித்த உறவுகளை பிரிக்க தவறவில்லை ...
எனினும் அன்பை வானமாய் விரித்துள்ளோம்
என்றோ ஒரு நாள் எங்காவது சந்தித்து விடுவோம் என்ற நம்பிக்கையில் !!
சுனைநீராய் இருந்த வாழ்க்கை ,
பாலைவானமாய் காட்சியளிக்கிறதே !
நினைவோடு உறவாடி நெடுநேரம் பேசிவிட்டேன் ,
நினைவுகளை நினைக்க மறந்தாலும் ,
மறக்க நினைத்ததில்லை ..
மரித்தாலும் மறக்கபோவதில்லை !!