Sunday, November 22, 2009

மழை !


மண்ணின் மீது கொண்ட காதலால் ,
மழை வந்தது !
மழையின் வருகையால்
பூமியின் ஜனனம் இங்கே ,
மேகமோ வீழ்ந்தது
மழையின் பிரிவால் அங்கே,
இப்படி தான் என் வாழ்வும் கூட
நான் வாழ்வதும் வீழ்வதும் உன்னாலே !!

Wednesday, November 18, 2009

வந்தாய் நட்பாய்!


கேட்காமலே நனைத்துவிட்ட
மழைத்துளியை போல் ,
உதிர்ந்த பின்பும் மரமிடையே
மீண்டும் புதிதாய் பூக்கும் பூக்களை போல் ,
சங்கில் சத்தமின்றி நுழையும்
காற்றை போல் ,
புல்லிதழில் புறப்பட்ட பனித்துளியின்
யாத்திரையை போல் ,
சரிந்த பின்பும் சுவாசம் உட்புக
ஆடும் மரங்களை போல் ,
இதழ்கள் அசைக்காமலே
மனதில் கேட்கும் இசையை போல் ,
ஓசைகள் ஏதுமின்றி ,
அழைப்புகள் ஏதுமின்றி ,
ஆசைகள் ஏதுமின்றி ,
கனவுகள் ஏதுமின்றி ,
எதிர்பாராத புயலாய் வந்தாய் ..
ஒழிந்திருந்த கனவுகள் எல்லாம்
கைகூடி மத்தாளம் போட்டு நிஜங்களாகும் வண்ணம் ,
நிராசைகளெல்லாம் நிறைவேறும் வண்ணம் ,
செவிடானாலும் உன் ஓசைகள் கேட்கும் வண்ணம் ,
கண்ணீரிலும் என் இதழ்கள் சிரிக்கும் வண்ணம் ,
வந்தாய் என் வாழ்வில் நட்பாய்!
வாழ்வை மாற்றினாய் தித்திப்பாய் !
இப்படியே உரைந்திட ஏங்கிடும் ,கனவாய்!
நம் அன்பென்னும் யாத்திரை
என்றும் தொடரும் மகிழ்ச்சியாய்!

Sunday, November 15, 2009


அண்மையில் ஒரு வார இதழில் படித்தேன் ஒரு நிகழ்வை..அதில் என் மனதில் தோன்றிய கவிதை இது ...

நாம் காதாலர்கள் அல்ல
எனினும்
அழிவில்லாத அன்பை பரிமாறிக்கொள்கிறோம் !
உறவின் ஆயுளை நாம் அறியோம்
எனினும் நம் ஆயுளின் எல்லையை கடந்த புரிதலை பகிர்கிறோம் !
மண்ணின் மீது கொண்ட காதலால்,
பூக்கள் உதிர்வதை போல ,
நாமும் பல முறை சருகுகளாய் வீழ்கிறோம் !
இலையுதிர் காலம் என எண்ணி
மறுபடியும் பூக்கிறோம் புதிதாய் !
நம் கவுகள் நிகழ்வுகளாகி,
நிகழ்வுகள் நினைவுகளாகி,
நினைவுகள் முத்திரையாகியும் கூட
பயணிக்கிறோம் ..
நாம் நண்பர்களா ? காதலர்களா ?
என்ற வினாவிற்கு விடை கிடைக்காத புதிராய் !

நீ

நேசிக்கும் உறவாய் நீ ,
சுவாசிக்கும் காற்றாய் நீ,
ரசிக்கும் இசையாய் நீ ,
உணரும் ஸ்வரமாய் நீ,
கனவுகளின் கருவாய் நீ,
மௌனத்தின் மொழியாய் நீ ,
என் எழுத்துக்களின் மூலாதாரமாய் நீ,
என் புன்னகையின் பிறப்பிடமாய் நீ,
என் கண்ணீரின் முடிவாய் நீ,
என் இதயத்தின் துடிப்பாய் நீ ,
நீ இன்றி நான் ஏது?
நாம் இன்றி வாழ்வேது ?

Saturday, November 7, 2009

காலை நேரம்


அழகான காலை வேளை,
ஜன்னலின் வழியே சூரிய ஒளியின்,
மிதமான ஸ்பரிசம் !
வானிலே மிதக்கும் மேகக் கூட்டங்கள்!
விடிந்தும் பிரிய மனமின்றி
இருக்கும் நிலவு!
சற்றும் ஓயாமல் துரு துருவென
சுற்றி திரியும் பறவை கூட்டங்கள்!
விண்மீன் கூட்டங்கள் ஒளியில் மங்கினாலும் ,
வானிற்கு வண்ணங்கள் சேர்க்கும் முயற்சியில் !
இயல்பினை மறந்தேன்
இவை அனைத்தின் வருடலில் !
காயப்பட்ட இதயத்திற்கோ இவைகள்
அறிய மருந்து!
மோட்சம் பெறாத விழிகளுக்கோ ,
இவைகள் அறிய விருந்து !

தேடலில் தொலைத்தேன்!


உன்னை பற்றி எழுத நினைத்தேன் ,
பேனா நுனியும் மயிலிறகு ஆனது ...
உன்னை காண நிலவை தேடினேன் ,
என் சோகத்திற்கு ஏற்ப ,
அமாவாசை ஆனது ..
வானத்தில் உன்னை தேடியே ,
மேகமும் என்னுடன் கண்ணீரை சிந்துதோ ?
உன்னை தேடிய வியப்பில் தான்
கடல் அலையும் ஓய்ந்ததோ ?
பலமுறை தேடியும்
உன்னை தொலைத்தேன் !
தேடலில் மட்டுமே ..
நினைவுகளில் அல்ல !!!

Thursday, November 5, 2009

மழைக் காதல்!-படித்ததில் பிடித்தது




நீ குடை விரிப்பதற்குள்
உன்னை தொட்டு விட்ட
மழைத்துளிகளை பார்த்து,
இன்னும் கறுத்தது வானம்,
என் முகமும் தான்...