Tuesday, December 7, 2010


அலைகள் மீது தவழும் குமிழியாய் ,
புல் மீது யாத்திரை செய்யும் பனித்துளியாய்,
சுடும் சுற்றொடரில் வீசும் தென்றலாய் ,
உயிரிழந்த பகலுக்கு மெருகூட்டும் இசையாய் ,
அமைந்தது அந்த ஓர் இரவு !

என்னிலை புகுந்த தனிமையின் தருணத்தில்,
என்னை தன்னிலை இழக்க செய்தாய் உனது வருகையால்!
சலனமற்ற என்னில்,
எதிர்பாராத உனது ஸ்பரிசம்
ஆஹா! சஹாராவில் குளுமை போல..

உனது வருகை ,
எழுச்சிகளற்ற என் அனுதின வாழ்வில்
புத்துணர்ச்சியாய் !

மணிப்பொழுதில் நீ ஏற்படுத்திய வாசம் ,
என் பொக்கிஷ சுவாசமாய் !
தனிமையின் முடிவுரையாய் வந்தாய்,
என்னை கவலைகளை மறக்க செய்து ,
நீ இருந்த நொடிபொழுதில் மகிழ்ச்சியாக்கினாய்!

ஜடமாய் பயணித்த என் பயணத்தில் ,
வந்தாய் திடீர் விருந்தாளறாய்!
நீ ஏற்படுத்தி சென்ற மெல்லிசை உணர்வுகளை
நேசிக்கிறேன் உன் ஒவ்வொரு வருகையிலும்
என் செல்ல மழையே!!

1 comment:

  1. ma I dunno if it is just my browser..But after you changed the theme, the tamil letters are looking different..do you see that too?

    ReplyDelete