Wednesday, January 6, 2010

பிடித்தவைகள் !



காலை நேர பறவைகளின் கூக்குரல் பிடிக்கும் ,
குளிரில் இதமான சூரியனின் ஸ்பரிசம் பிடிக்கும்,
புல்வெளியில் கண்ணயர பிடிக்கும் ,
பனித்துளியை பார்த்து கொண்டே இருக்க பிடிக்கும் ,
உதிரும் பனியில் சூடாய் தேநீர் அருந்த பிடிக்கும் ,
மெல்லதளுவும் காற்றின் வருடல் பிடிக்கும் ,
வெள்ளம் போல கொட்டும் அருவியில் நிற்க பிடிக்கும் ,
கடலில் கால் நனைக்க பிடிக்கும் ,
பௌர்ணமி நிலவை இமைக்காமல் ரசிக்க பிடிக்கும் ,
நட்சத்திரங்கள் கண்ணடிப்பது பிடிக்கும் ,
மழலையின் கொஞ்சும் பேச்சு பிடிக்கும் ,
சிறு குழந்தையின் வருடல் பிடிக்கும் ,
கொட்டும் மழையில் தனியாக நனைய பிடிக்கும் ,
மழையில் நனைந்ததற்கு அம்மாவின் ,
கோபம் கலந்த அன்பு சிணுங்கள் பிடிக்கும் ..
தனிமையில் இசையின் அரவணைப்பு பிடிக்கும் ,
தவறாமல் வரும் நினைவுகளின் வருகை பிடிக்கும் ,
வெட்டவெளியில் ஊஞ்சலாட பிடிக்கும்,
பேசி கொண்டே இருக்க பிடிக்கும் ,
சில தருணங்களில் மௌனம் பிடிக்கும் ,
மௌனத்தின் ஆதிக்கத்தில் கவிதை எழுத பிடிக்கும் ,
நண்பர்களின் அருகாமை பிடிக்கும் ,
நேசிக்கும் உறவுகளின் அன்பு தொல்லை பிடிக்கும்,
உயிரான உறவுகளிடம் கோபம் கூட பிடிக்கும் ,
எனக்கு பிடித்தவைகளை (ப)பிடிக்கும்,
அணைத்து இதயங்களையும் பிடிக்கும் !!

No comments:

Post a Comment