Wednesday, December 16, 2009

கடவுளின் துணை !




பேதமையில் அறிவொழியாய்,
வெற்றியில் உறுதுணையாய் ,
தோல்வியில் ஊக்கமருந்தாய் ,
இருளில் ஜோதியாய் ,
வெயிலில் நிழலாய் ,
அடைமழையில் குடையாய் ,
இடி முழக்கத்தில் சிருஷ்டியாய்,
கண்ணீரில் ஆறுதலாய் ,
சிரிப்பினில் புஷ்பமாய் ,
தனிமையில் பெருந்துணையாய் ,
இதயத்தில் வாசம் பண்ணும் தேவனாய்,
எனக்குள் என்றும் துணையாய் இருக்கிறாய்!

Saturday, December 5, 2009

வாழ்க்கை அழகானது !


முர்களுக்கு நடுவிலும் கூட,
ரோஜா செடி என்றும் அழகு தான் ..
வறண்ட பாலைவனத்திலும் காக்டஸ்
செடி அழகு தான் ..
சுட்டெரிக்கும் சூரியனும்
சுகம் தான் குளிரின் ஆதிக்கத்தின் பொது ..
பாசி படிந்த தண்ணீரிலும் கூட
இலைகளின் தஞ்சம் உண்டு ..
கனியற்ற மரத்திலும் கூட
பறவைகளின் வருகை உண்டு ..
பேய் மலைக்கும் கூட
கடைசி மழைத்துளி உண்டு ..
நம் வாழ்வும் கூட இப்படிதான் ,
நிறைவேறாத கனவுகளும் என்றோ ஒரு நாள் நிஜங்களாகும் ..
சாத்தியமற்ற முயற்சியும் ஒரு நாள் உயிர் பெரும்..
கவலைகளும் முகவரி இன்றி மறையும் ..
வாழ்வின் விழியில் ஒளிந்து கொண்டிருக்கும் அழகை
விழித்து ஆராயுங்கள் ..
வாழ்வை காதலிப்பிர்கள்..
வெறுப்பாய் தோன்றும் வாழ்வும் கூட
இனிமையாய் மாறும் ,
நரகமான தருணங்களும்
சொர்க்கமாய் தோன்றும் ,
வாழ்வின் மீது நாம் கொண்டுள்ள பார்வையை வேறுபடுத்தினால்!