Monday, August 23, 2010

சாலையோர காகிதம் !


தினம் தினம் பலகோடி காகிதங்களை சாலையில் காண்கிறோம் ,
என்றுமே அதனை நாம் சிந்திக்க தவறிவிடுவோம் ..அதனை பற்றிய கவிதை தான் இது ,

கைகளில் சிறையாய்,
காலடியில் சருகாய் ,
குப்பையில் ஜடமாய் ,
இருக்கும் காகிதத்தில் உள்ள உயிர் தான் என்ன ?!

விழியில் தொடங்கி ,
வழியில் முடிந்த
காதல் காவியமாக கூட இருக்கலாம் !
தினம் தினம் சேகரித்த காதல் ,
இன்று பறக்கும் காகிதமாய் ,
பறக்கும் திசை தெரியாமல் சாலையில் !!

நண்பனின் கையெழுத்தை ,
பொக்கிஷமாய் சேகரித்த முத்தாய் கூட இருக்கலாம் !
அருகாமை தான் என்றும் கிடைப்பதில்லை
அவன் செதுக்கிய எழுத்துக்களையாது சேகரிக்க
எண்ணிய மனதின் வலி தான் என்னவோ?!

இயற்கையின் துணையில் ,
காற்றின் வீச்சில் ,
காகிதத்தை நனைத்த மழையை
அன்போடு இழுக்கும் சூரியனின் சக்தியில் ,
காகிதம் ஓவியமாகவே இருப்பிடம் செல்ல வேண்டுகிறேன் !
சென்றாலும் செல்லாவிட்டாலும் ,
இருப்பது சாலையாகினும், குப்பைத்தொட்டியாகினும் ,
நம் மனதின் எண்ணங்களை என்றுமே கொட்டும்
அந்த காகிதம் என்றுமே ஓவியம் தான் !!

1 comment:

  1. //விழியில் தொடங்கி ,
    வழியில் முடிந்த
    காதல் காவியமாக கூட இருக்கலாம் !
    தினம் தினம் சேகரித்த காதல் ,
    இன்று பறக்கும் காகிதமாய் ,
    பறக்கும் திசை தெரியாமல் சாலையில் !!//

    Expressive!

    ReplyDelete