Sunday, March 14, 2010

விடியலின் தேடலில்


அனுதின வாழ்வின் அங்கமாகிவிட்ட துயரம் ,
புன்னகையை மறந்த இதழ்கள் ,
கண்ணீர் துளியை சேகரித்த விழிகள் ,
இரண்டும் நடத்தும் நாடக விழாவில்
உணர்ச்சிகளற்ற உயிராகவே ஆனேன் ஓர் நாள் !
கதறி அழுக தோன்றும்
எனினும் விட்டில் பூச்சியாக புன்னகைக்கிறேன்
புன்னகையில் ஒளிந்திருக்கும் கண்ணீரை யார் அறிவாரோ ?
வாழ்வின் இலையுதிர் காலம் இவை தானோ ?!
மறுபடியும் தழைப்பது எப்போதோ ?
நொடிகளின் அசைவில் அடிகள் அதிகரித்தன ,
எனினும் அதனில் வீழ்ந்து விடவில்லை ,
நிரந்தரமான விடியலின் தேடலில்
என்றுமே நான் நானாகவே !!