Saturday, February 6, 2010

என்றும் அழியாத காதல் !


என் கண்கள் ஏங்கியும்
விழிக்கமுடியவில்லை,
நெடுநீள பயணம் முடிவடைந்ததேனோ ?!
உறக்கத்திலே தொலைந்ததும் ஏனோ ?!
கனவுகள் உறைந்ததை உணர்ந்தேன் ,
உணர்ச்சிகள் செயல் இழந்ததை உணர்ந்தேன் ,
எனினும் நினைவுகளின் உயிரோட்டம் என்னுள்ளே!!
அய்யோ..
நான் நித்தமும் மூழ்கிய உன் மூச்சில்
இனி மூழ்க முடியாமல் போனதேனோ ?!
உன் கரங்களின் செல்ல சிறையில் ,
இனி பயணிக்க முடியாததேனோ ?!
உன் மார்பில் உறங்கிய தூக்கத்தை தொலைத்து ,
நிரந்தரமாய் தூங்கிய அவலம் ஏனோ ?!
என் இயலாமையையும் மீறி ,
என் காதலை சொல்ல தவித்தேன் ,
சொல்ல மறந்த காதல் ஆனதேனோ ?!
கண்ணில் நிறைந்த ஏக்கம் ..
நெஞ்சில் நிறைந்த உனது தாக்கம்..
இறுதி துடிப்பில் நிறைந்த உனது சுவாசம் ,
என் இறுதி பொக்கிஷமாய் !!
இறந்தேன் நிரந்திரமாய் ,
வாழ்வேன் உன்னில் நிரந்திரமாய் ,
மறித்தும் காதலிக்கிறேன் உன்னை ,
இன்னும் வாழ்கிறாயே என்னுள் !!

No comments:

Post a Comment