Wednesday, September 29, 2010

நம் நட்பு


காரிருள் சூழ்ந்த பொழுதிற்கு ,
ஒளியேற்றிய சூரியனாய் ..
அசைவின்றி அயர்ந்த பொய்கையை ,
எழுப்பிய முதல் கல்லாய் ..
கற்களை செதுக்கிய சிற்பிக்கு ,
வடிவம் கொடுத்த உருவமாய் ..
மேகத்தின் சுமையை குறைத்த,
முதல் மழைத்துளியாய் ..
கருப்பு வெள்ளை படலம் கொண்ட வானத்திற்கு ,
வண்ணங்களை சேர்த்த வானவில்லாய் ..
உறைந்த நேரத்தை கடத்திச் செல்லும்
கடிகார முள்ளாய்..
உதிர்ந்த பூக்களை அரவணைக்கும்
பூமியாய் வந்தாய் என் வாழ்வில் மெல்லிசையாய் !
என் புன்னகையின் ரசிகனாய் ,
என் அழுகையின் எதிரியாய் ,
என் தேடல்களின் துணையாய் ,

என் புலம்பல்களுக்கு செவியாய்,
நான் அறியாத உலகிற்கு விழிகளாய் ,
என் இதயத்திற்கு உயிராய் ,
என் வாழ்வின் இறுதிவரை நீ வேண்டும் நட்பாய்..
ஒவ்வொரு நிமிடமும் பொக்கிஷமாகும்
நம் நட்பின் பயணத்திலே இன்று !
இன்று மட்டும் அல்ல என்றென்றுமே !!