Tuesday, October 22, 2013

Joy of Giving!


Imagine a day in your life
where you are left all alone;
where your tears go unseen;
where you find no solace;
Imagine your desperate loneliness!
There are n number of people
Longing for care,
Craving for love,
Awaiting for a shelter in dear ones arms,
And above all longing for compassion and a sense of security.
Take a pause to look at the world outside.
There are lot more to be taken care off!
Never complain, feel blessed for all that we are!
Take an oath to make a person more livelier, more happier and more stronger each day!
Live and let all live!
Love and be loved!
Experience the plethora of joy in giving!

நீ என் அருகில் இல்லாமல் தவிக்கிறேன்!


பூத்துக்  குழுங்கும் பூக்களின் சிரிப்பில்,
மழைத்துளியின் இதமான நனைப்பில்,
அனுதினமும் உன் குரலை பிரதிபளிக்கும் சுவரில்,
நித்தமும் நீ உறங்கிய தலையனையின்  ஸ்பரிசத்தில்,
இயல்பு மாறாத புகைப்படத்தில்,
உன்னை காண்கிறேன் அனுதினமும்!
விட்டுச் சென்ற உணர்வுகள்,
வெளிபடுத்த தவறிய அன்பு வார்த்தைகள்,
யாரும் நிரப்ப முடியாத வெற்றிடத்தை விட்டுச் சென்றாய்!
பலமுறை சொப்பனத்தில் உன்னைக் காண்கிறேன்!
ஒவ்வொரு முறையும் கனவுகள் நிஜங்களாகாத
என்ற ஏக்கத்துடனே விழிக்கிறேன்!
சேகரித்த சிட்டு நினைவுகளுடன் இன்றோ நான் பயணிக்கிறேன்
உன் பாதச்சுவடுகளை பின் தொடர்ந்துகொண்டே!
பாட்டிமா, நீ என் அருகில் இல்லாமல் தவிக்கிறேன்..

வறுமையின் பிடியில்!


கண் விழித்ததும் அருகில்  தேநீர் இல்லையென்றால்,
அம்மாவிடம் டிஷ்யூம் டிஷ்யூம்!
தி இந்து  நாளிதழுக்கும்,  தின மலர் நாளிதழுக்கும்,
அதிகாலையில் தந்தையிடம் போட்டியிடுவதும் வழக்கமே!
டெய்ரி மில்க் தொடங்கி ரிமோட் வரை
இப்படி பல அற்ப காரணங்களுக்காக போரிடுவதும் வழக்கமே!
இப்படி அன்றாட வாழ்வில்,
நிறைகளை திரையிட்டு, குறைகளையே காணும்
மனித எண்ணங்களின் தாக்கம் நம்முள்ளே!
    வறண்டு போன சர்மம்,
    அழுக்கேறிய குளல்,
    கிழிஞ்சல்கள் கொண்ட ஆடை,
    காய்ந்து போன வயிறு,
    குடும்பத்தினால் கைவிடப்பட்ட நிலை,
    சிறு குழந்தைகளை பார்க்கும் தருணங்களில்,
    தன் குழந்தையை பார்க்க துடிக்கும் நெஞ்சம்!
    நிறைகள் பல, குறைகள் சில என
    வாழும் இவர்கள் மத்தியில்,
    நாமெல்லாம் உயிர் பெற்றும் உணர்வுகளற்ற
    காற்று நிரம்பிய பலூன்கள் மட்டுமே!
                                   -தினம் தினம் வறுமையில் வாழ்பவர்களுக்கு சமர்பனமாய்!