Monday, September 28, 2009

Take care




Three things in life that, once gone, never come back -

(1)- Time
(2)- Embedded Words
(3)- Opportunity

Three things in life that may never be lost -

(1)- Peace
(2)- Hope
(3)- Honesty

Three things in life that are most valuable -

(1)- Love
(2)- Self-confidence
(3)- Friends

Three things in life that are never certain -

(1)- Dreams
(2)- Success
(3)- Fortune

Three things that make a man/woman -

(1)- Hard work
(2)- Sincerity
(3)- commitment

Three things in life that can destroy a man/woman -

(1)- Alcohol
(2)- Pride
(3)- Anger

Three things in life that, once lost, hard to build-up -

(1)- Respect
(2)- Trust
(3)- Friendship

Three things in life that never fail -

(1)- True love
(2)- Determination
(3)- Belief

Take care of these things ..

Thursday, September 24, 2009

இயலாமை !



நிதமும் உன்னை பார்க்கிறேன் ,
பொழுது தவறாமல் !
நீ துயிலுவதில் இருந்து
அதிகாலையில் எழும் வரை
உன்னை காண்கிறேன் !
என்னில் விழும் முதல் பிம்பம்
உன்னுடையதுதான் !
என் இயலாமையை மீறியும்
உன்னை கட்டி அனைக்கதோன்றும்
அழகாய் என் முன்னிலையில்
நீ நிற்கும் பொழுது !
உன் கலைந்த கூந்தலின் அசைவுகள் ,
உன் வேடிக்கையான நடன கூற்றுகள் ,
இவ்வளவு ஏன்??
நீ பாடுவதை கூட உணர்ந்திருக்கிறேன் !
நீ பிறரிடம் பேசமுடியாத கோடி சொற்களை ,
என் முன் வந்து பேசுவாய் ஆவேசமாய் ..
எனினும் என் செவிகள்
ஒரு போதும் மூடியதில்லை !!
ஏனோ என்னை விட்டு பிரிய
உன்னுள்ளே ஆயிரம் விண்ணப்பங்கள் ?
செல்வதற்கு முன் பலமுறை என் பார்வையில் விழுகிறாய் !!
இவைஅனைத்தையும் எண்ணி பெருமிதம் என்னுள்..
ஆனால்
நீ என்னிடம் வந்து கதறி அழுகையில் ,
என் கரங்களை நீட்டி உன்னை அணைக்க முடியவில்லையே
உன் கண்ணீரை அகற்ற ,ஆறுதலாக பேச துடித்தேன்
ஆனால் முடியவில்லையே!!
உன்னுடன் கைகோர்த்து நடக்க முடியாத ,
உயிரில்லாத ஒரு கேடயம் ஆனேனே ?!
ஏன்?!?
கண்ணாடியாக பிறந்ததனால் !!

அழுகுரல் !



பிறந்தேன் நானும் கெம்பீரமாய் ,
தாயின் ஸ்பரிசத்தில் ,
தந்தையின் அரவணைப்பில் ,
தொடர்ந்தது என் ஆயுட்காலம் ..
கண்டேன் வானவில்லை பலமுறை
அழகிய வண்ணங்களில் !
ஒருமுறை கூட என் ஆடையில்
வண்ணங்களை கண்டதில்லை ..
நடைபிணமாக திரிந்தேன் !
செவியில் குப்பைத்தொட்டியின் பெருமிதக் குரல்
ஓரமாக என்னை சுற்றி இத்தனை இழைகள் என !!
அப்பொழுது தான் இரு தினங்கள் உண்ணாமல் ஓய்ந்ததை உணர்ந்தேன் !!
வீட்டு ஜன்னல்களில் ஆயிரம் சட்டைகள் ,
கண்டேன் என் சட்டையில் ஆயிரம் ஜன்னல்களை !
மனதில் கட்டினேன் ஆயிரம்கோடி கனவுகள்
வறுமை கட்டியது என் கனவுகளை !!
சிறகு முளைத்து பறக்க ஆசைதான்
என் ஏழ்மை என்னைவிட்டு பறந்தால் !!
வேண்டுவது ராஜாங்க வாழ்வை அல்ல
வாழ்வை போராட்டமாக அல்லாமல் ,
உணர்ந்து வாழ ஒரு வறுமை இல்லாத வாழ்வை மட்டுமே !!
--ஒரு ஏழை சிறுவனின் அழுகுரல்


Tuesday, September 22, 2009

சொல்லப்படாத காதல் !




உன் விழியினில் என் பிம்பம்
தெரிந்தபோது உணர்ந்தேன்
உன் பார்வையில் நான் உரைந்திருக்கிறேன் என்பதை !
நாம் பேசிய ஆயிரம்கோடி வார்த்தைகளின்
நடுவில் துளிர்விட்ட உனது சிறிய
மௌனத்தில் ,
உன் விழிகள் பேசிய ஆயிரம்கோடி மொழியில் ,
உணர்ந்தேன் எனக்கான உன் காதலை !
பிரியும் வேளையில் உன் கண்களின் ஓரம்
கசியும் கண்ணீர் துளியில் உணர்ந்தேன்
உன் கண்ணீரில் கூட என் உயிர் உலவுவதை !
நிகழ்வுகளை விழி மூடி யோசித்தபோது உணர்ந்தேன்
இருளை அல்ல
உன் பிம்பம் என் நினைவுகளிலும் ஊடுருவதை !
காதலை சொல்லாமல் கொள்ளாமல்
பயணிக்கும் காதலர்களாய் !!

Sunday, September 20, 2009

நான் மிகவும் ரசித்த கடல் !!




காற்று பலமாக வீசியது ,
தென்றல் தீண்டியது ,
சிறு மழை துளிகள் பெரு மழை ஆகிய தருணம் ,
அலைகள் வந்து தீண்ட காத்திருந்தேன் கரையில் ..
சில நொடியில் அலைகளோடே இணைந்து விடுவேன்
என்பதை அறியாமலே !
கடலே ,
சிப்பி உயிர் கொடுத்த முத்துக்களின் பிறப்பிடமாய் ,
பல உயிரினங்களுக்கு பிறப்பிடமாய் ,
பல காதலர்களின் காதலுக்கு பிறப்பிடமாய் ,
இருந்த நீ ,
பல மனிதர்களுக்கு இறபிடமாயும் ஆனாயே !
வசந்தம் மட்டுமே வந்த உனது பாதையில் ,
சுனாமி என்னும் புயலும் வீசியதே .
கசக்கும் நினைவுகளை கொடுத்துவிட்டு சென்றதே..
உனக்குள் ஏன் இந்த வெறி ??
ஒரு வேளை நீ மகிழ்ச்சியாய் இருப்பதால் தான்
கொந்தளிக்கிறாயா ?
இல்லை
உன்னை தீண்டும் மனிதர்களை ,
தடுப்பதற்கு கொந்தளிக்கிறாயா ?
கொந்தளி வேண்டாம் என சொல்லவில்லை ..
எங்களின் துன்பம் கொந்தளிக்காத வரை கொந்தளி..
கசக்கும் நினிவுகளை கொடுத்து சென்றாய் ..
எனினும் உன் அபிநயத்தில் மயங்கி ,
கசக்கும் நினைவுகளை மறந்து ,
மீண்டும் அலைகள் வந்து தீண்ட காத்திருகின்றேன்
நீ அடித்து செல்ல மாட்டாய் என்ற நம்பிக்கையில் ?!!

காதல் !




காதலை சொல்ல தவித்த நாட்கள் அவை
சொல்ல தைரியமின்றி ,,,

அலைகளை அனுப்பினேன்
அலைகளும் உன்னை பார்த்து
சொல்ல முன்வந்து வந்து பின் வாங்கின

சரி என்று

மேகத்தை அனுப்பினேன்
மேகமும் உன்னிடம் காதலை சொல்ல முடியாமல்
மழையாய் பொழிந்தது

சரி என்று

புறாக்களை அனுப்பினேன்
புறாக்களும் உன்னை தவிர வேறு எல்லா இடத்துக்கும்
பறந்தது

சொல்ல வார்த்தைகள் இன்றி
தவித்து கொண்டிருந்தேன்

ஒரு நாள் தைரியம் பிறந்தது
ஒரு மேகம் சூழ்ந்த நாளில்
உன்னை நோக்கி
உன் பாதைகளை
பின் தொடர்ந்து
நடந்து வந்தேன்

நடந்து கொண்டிருக்கும் வேளையில்
சற்றென்று மழை பெய்தது ...

நீ திரும்பி பார்த்தாய்
நீ என்னை அழைத்தாய்
மழை நம்மை குடைக்குள் இணைத்தது...

இடி நம் கரங்களை
இருக்க பிடிக்க செய்தது ..

மழைக்கு நன்றி கூறிய வாறே
எப்படி சொல்ல என்று
யோசித்து கொண்டிருந்த வேளையில் ,,,
நீ சற்றும் பதறாமல்
பயபடாதே என்று உன் அழகிய குரலில் கூறினாய்

நம் நடை பயணம் முடிவடையும் வேளையில்
அன்றும் சொல்ல முடியாமல் போனதே
என்று எண்ணி உன்னை பார்த்தேன்

நீ சிறிய மௌனத்திற்கு பின்
நம் காதலை இணைத்த மழை மீண்டும்
வர ஆசை என்று கூறினாய்..
அப்போது தான் உனக்குள்ளும் காதல் இருந்ததை உணர்ந்தேன் ...

நீ சொன்னதை கேட்டதும் இன்ப அதிர்ச்சி
வாகனங்களின் சப்தம் கூட இசையாய் ஒலித்தது ...

வீடு திரும்பியதும் , ,,
அன்றைய பொழுது முடிவதில் ஏனோ தயக்கம்
உறக்கத்தில் கண்களை மூடினேன்
ஆகினும் இதய துடிப்பு உனக்காகவே துடித்தது ...

அப்போது உணர்ந்தேன்
சொல்ல மறந்த காதல் ஆகிவிடுமோ
என்று தவித்த வேளையில் ,,,
சொன்னால் தான் காதல் என்பதை
அறிந்திருந்தால்
இன்னும் அதிகம் நாள்
உன்னுடன் காதல் வாழ்வில் வாழ்ந்திருக்கலாமே என்று !!

வாழ்க்கையை காதலிப்போமே!




அன்றாட வாழ்வில்
விழிக்க மறுக்கும் விழிகளுடன்
போராட்டத்தை வென்று
இமைகளை துறந்து,
மீண்டும் ஒரு புதிய நாளின் பயணத்தில் ,
பார்வையில் ஒரு புதிய தேடல்,
கால்களில் புதிய ஓட்டம்,
மனதினில் பலவித வாக்குவாதங்கள்
என நாட்கள் நகர்கிறது ..
இத்தனை பரபரப்பில்
இயற்கையின் அழகு,
சூரியனின் வருகை ,
பூக்களின் மலர்ச்சி,
வயல்வெளியின் பசுமை ,
சாலையோர பூக்கள் ,
மெருகூட்டும் மலைச்சாரல் ,
மெல்லத்தலுவும் தென்றல் ,
பறவையின் ஓசைகள் ,
பூக்களின் மொழிகள் ,
மேககூடங்களின் ஒற்றுமை ,
கோவில் மணி ஓசை ,
வானவில்லின் வண்ணச் செழிப்பு ,
வண்ணத்து பூச்சியின் அழகு ,
மழலையின் சிரிப்பு ,
முகம் தெரியாதவர்களின் புன்னகை ,
எதிர்பாராத சந்திப்பு ,
சூரியன் மறையும் போது இன்னொரு நிற வானின் பிறப்பு,
நிலவின் சிரிப்பு ,
கண்ணடிக்கும் நட்சத்திர கூட்டங்கள் ,
அபூர்வமாக தோன்றும் வான வேடிக்கைகள் ,
வாழ்வின் அழகு தான் எத்தனை ?!?!?!
வாழ்வின் அழகிய தருணங்கள் இவை தானோ?
நின்று பார்க்க நேரம் இன்றி
சென்று கொண்டே இருக்கிறோம் ...
அழகை ஆராதிக்க ,
இயற்கையை வர்ணிக்க ,
ஒரு நொடி உலகம் நின்றது என எண்ணி
திரும்பி பார்ப்போமே!!
உயிரோடு இருக்கும் இந்த பிரபஞ்சத்தில் ,
வாழ்கையை காதலிபோமே !!
சில நோடிகலாது துக்கங்களை மறந்து !!

Thursday, September 17, 2009

எப்படி உணர்த்துவேன்?!




இமைக்க மறுக்கும் என் இமைகளுக்கு
எப்படி புரியவைப்பேன்
கண்ணுக்கு எட்டும் தொலைவில் ,
நீ இல்லை என்பதை !!
என் துயிலைக் கெடுக்கும்
கனவுகளுக்கு
எப்படி புரிய வைப்பேன்
நினைவுகளில் தொலைத்ததை
கனவுகளில் மீட்க முடியாதென்பதை !!!
நீ பேசிய வார்த்தைகளை
சேகரித்த செவிகளுக்கு
எப்படி உணர்த்துவேன்
அவை தொலைந்து போன சொற்கள் என ?!!
துடித்து கொண்டே இருக்கும்
என் இதயத்திற்கு
எங்ஞனம் கூறுவேன்
அதன் ஆயுள்காலம் முடிந்து விட்டது என்பதை !!
நிகழ்வுகளை மறக்க நினைக்கிறேன்
இவைகளோ மறப்பதை மறுக்க நினைக்கிறதே !!



Sunday, September 13, 2009

படித்ததில் பிடித்தது-இமைகளை மூடாதீர்கள்





நான் இறந்த பிறகு
என் இமைகளை
மூடிவிடாதீர்கள் !
திறந்தே வையுங்கள்
அவள் வந்தாலும் வருவாள்
என் இறுதி ஊர்வலத்தைக்
காண்பதற்கு !
ஒரு சமயம் அவள் வந்தால்
விலகி நில்லுங்கள்
என் விழிகளில் விழும்
இறுதி பிம்பம்
அவளுடையதாய் இருக்கட்டும் !

Friday, September 4, 2009

நீ வருவாய் என!!

நீ சென்ற வழிபாதையில் ,
என் விழிப்பயணத்தை
தினம் தொடருகிறேன் !!
நீ எப்போது மீண்டும் வருவாயென்று!
விழிகளுக்குஉள்ளே போராட்டம் இமைக்கலாம வேண்டாமா என ?
ஏனெனில் இமைக்கும் பொழுது
ஒரு வேளை நீ வந்து மறைந்து விட்டால் ?!!
இமைக்க மறுக்கும் விழிகளின் தாக்கத்தில் !!!

natpu!!







Thursday, September 3, 2009

அம்மா






கருவறையில் உயிர் கொடுத்தாய் ...
உன் கருவிழியில் என்னை நிறைத்து ...
கண்களை காக்கும் இமைகளாக உள்ளாய் ..
உன் அன்பு கவலைகளை ,
சுவாசிக்க மற்றும் அல்ல
நேசிக்கவும் கூட தான் கற்று கொடுத்தது ....
தாயில் சிறந்ததோர் கோவில் இல்லை
என்று சொல்வார்கள் ,
என் கண் கண்ட தெய்வம் நீ தானே அம்மா !!
உன் கரம் கோர்த்து நடை பயின்றேன் ,
என் சுவாசம் என்னை விட்டு பிரிய பயிலும் வரை,
என்றென்றும் இருப்பேன் உன்னுடன் ..
என்றும் மாறாத என் அன்புடன் !