Saturday, October 30, 2010

A girl in ur life!


A girl, the most challenging person on earth. Right from old histories a girl has been portrayed as a coward,prisoner of home,dependent and what not? In the 21st century that kind of old curtain have been folded and a new bliss in almost every deed of woman is taking place at its pace..From a coward to a bravo, prisoner of home to a flier all over world everything have transformed..A girl lovable mother for a son, most valuable daughter for a father, everlasting bond for a husband,best companion for a brother in all his joy and sorrows,best person to rely on for a friend and a most promising treasure for any individual!know her well u will get to know the silent happenings behind her.That will make u realize she is like a air which makes its presence everywhere without even a glimpse of noise around.. until now there are several sayings that a girl is always under the cover of a father,brother,friend and a husband. Its not actually so.. she is not that strong enough to see u live and struggle without the presence of her.


Know her tears behind her smile, tonnes of words behind her silence, handful of surprises beside her tone,bountiful amount of love and care behind her anger, her fear of missing u behind her fights.. challenge her at her strengths and not at her weaknesses. she can really teach u n number of lessons. Know her well!!


She can't be with u at all part of time but definitely beside you in all your moments..she can't wipe out all your past regrets but can give u a cherishable present..she may not be intelligent to the level you expect but she is brilliant enough to make you shine by being your beacon..she can't give you all the wealth that you expect but she can afford you the most priceless gift HER HEART never break it..


As a mother she can't help you always.. once you go out of the shell to face the world on your own..As a sister she can't giggle with you always once you ignore her and get a large number of people to laugh with..There are moments where she can't lay her presence with you but never ever misses even a single beat of her heart to think about you..


Need not hug her but dont crush her down to earth,.Need not hold her but don't leave her alone, she can't bear the absence of u. Need not share your thoughts with her but don't share it with an outsider, she is too posessive.Need not love her but never hate her. Need not understand her but don't assume her.Value her,trust her,cherish her, salute her, treasure her for she is your language of silence, enlightener of your thoughts, depositor of your trust and much more than that she is a most valuable soul who loves you beyond words can express...

Saturday, October 23, 2010

சமர்ப்பணமாய்..


என் பிறப்பின் போது அறியவில்லை
என் வாழ்வை உங்களோடு செலவிடுவேன் என்று !
அன்பென்னும் பெருங்கடலில் மூழ்கியதில்லை
அன்பின் முகவரியை நீங்கள் என்னுள் புகுத்தும் வரை!
என் புன்னகையை ரசித்தது இல்லை
நீங்கள் என்னோடு நகைக்கும் தருணம் வரை !
நீர்வீழ்ச்சியாய் விழும் என் கண்ணீர் துளியை எவரும் திருடியதில்லை
திருடுவதற்கு உங்கள் கரம் வரும்வரை !
தனியே துடிக்கும் என் இதயத்தின் பாரத்தை இறக்கியதில்லை
சுமைதூக்கியாய் என் வாழ்வில் நீங்கள் வரும்வரை !
என் காலச்சக்கரங்கள் அசைந்ததில்லை
என் பயணத்தில் நீங்கள் நிறைந்திருக்கும் வரை!
என் துயரத்தில் தோள் கொடுத்து ,
என் இன்பத்தில் மத்தாப்பாய் சிரித்து,
என் வெற்றியில் சூரியனாய் மெருகூட்டி,
என் தோல்வியில் சுவாசமாய் உடனிருந்து ,
என் தனிமையின் இருப்பிடத்தை தொலைக்கவைத்து,
மறைமுகமாய் ஒவ்வொரு நொடியும் என்னை நேசித்து ,
தனியே என்னை தரிசு மரமாய் வாழவிடாமல்
பூஞ்சோலையாய் வாழவைக்கும் என் நலம்விரும்பிகளை ,
இமயங்களையும் தாண்டி
நேசிக்கிறேன்

Dedicated to my brother and sisters..

Monday, October 18, 2010

ஒரு தலைக் காதல்!


ஒருவன் கொண்ட காதலும் அதனால் அவன் சந்தித்த மாற்றங்களுமே இந்த கவிதை..

உன்னை பார்த்த அந்த நொடியிலே ,
மீள முடியாமல் சிக்கினேன் உன் பார்வையின் அலைவரிசையில் !
என் இருபது வருட வாழ்வில் ஏற்படாத
ஓர் புதிய உணர்வின் வருகை என்னுள்ளே !
என்னை வினவிய படியே நகர்ந்தேன்
புதிதாய் பளிச்சிட்ட சாலையின் நடுவே ..

முற்றிலும் பதிந்த என் நினைவேட்டில்
பளிச்சிட்ட அந்நாளின் பின்னோட்டம் ..!
ஆஹா அவள் இதழ்கள்
ஓசையின்றி இசைக்கும் வீணை நரம்புகள் !
அவளது குரல்
சிலிர்க்க வைக்கும் ஸ்வரம் !
அவளது விழிகள்
அபிநயித்த கவிமொழியில் ,
வீழ்ந்தேன் அவளிடம் முற்றிலுமாய்
அவள் இதயக் கதவின் சாவியை தேடிக்கொண்டே !!

என் கற்பனைக்கெட்டாத பல கேள்விகள் என்னுள் ?!
எண்ணங்களை என்னுள் சிறைபிடித்து என்ன செய்யப்போகிறேன்
சிறகுகள் முளைத்து அவளிடம் அவைகள் பறந்தால்தான் என்ன ?
இப்படி என்னை ஊக்குவிக்கும் உள்ளுணர்வு ஒருபக்கம் ..

இடி முழக்க சப்தமாய் சிதரிடுமோ ?
மேகம் வழிமொழிந்தும் ,
மண்ணை சந்திக்க நிராகரித்த மழை ஆகிடுமோ?
அவள் சிந்தும் புன்னகை கூட திரையிட்டு கொள்ளுமோ ?
என வினாவும் மனம் மறுபக்கம் ..

புதிரான ஓர் பதிலையே அவள் அளிப்பாள் என அறிந்தும் ,
காதலை சொல்ல பிறந்த உத்வேகத்துடன் புறப்பட்டேன் ..
பலவித ஒத்திகை என்னுள்
அவளுடன்
பயணம் செய்ய
முன்னுரையாய் அமைய போகும் அந்த ஒரு வினாடி உரையாடலுக்காக !!
சரிக்கிடும் சக்கரமாய் புறப்பட்ட என் கால்கள் ,
விவேகமாய் அவள் இருப்பிடம் தேடி விரைந்தேன் ..

முகவரியை தவறவிட்ட காற்றைப்போல ,
மறைந்த மின் ஒளியை போல ,
உணர்ந்தேன் அவள் வேறிடம் சென்றுவிட்டாள்
எனக் கேட்டதும் ...

உறைந்த பாறையாய் ,
உருகிய பனிக்கட்டியாய் ,
சுவாசம் உட்கொள்ள முடியாமல் தவித்தேன் ..
வனாந்திரமாய் காட்சியளித்த சாலையில்
ஜீவனற்று பயணித்தேன் ..

சுக்குநூறாய் நொறுங்கிய என் காதல் கோட்டை
வடிவமைக்க எண்ணியும்
அவள் சென்ற திசை ,
அவள் வசிக்கும் சொர்க்கத்தின் விலாசம் ,
அவள் கைபேசி எண்
என எதுவுமே இல்லாத நிலை !

பல வருடங்களுக்கு பிறகு ....

திடீரென வீசும் புயலைப்போல ,
மின்னல் வேகத்தில் பயணிக்கும் நிழலை போல ,
சத்தமின்றி நுழையும் தென்றலை போல ,
நான் வெறித்து பார்த்த திசையிலிருந்து
மரக்கிளைகள் அசைந்தது போல
வண்ணமாய் மிதந்த அந்த இதழ்களின் அசைவுகள் எண் கண்ணெதிரில் !!!
காலங்கள் கடந்து சென்றும் ,
நிரந்திரமான மாற்றங்கள் பிறந்தும் கூட ,
சற்றும் என்னை விட்டு மறையாத அவளது பின்பம்
என் முன்னே நிஜமாய் !!
தூரத்தை கடத்திச் செல்லும் அந்த ரெயில்
அவளையும் அந்த ஒரு நொடி புன்னகையையும் கடத்திச்சென்றதே ..

மௌனமாய் உறங்கிக் கொண்டிருந்த நினைவேட்டில்
மீண்டும் ஏற்பட்ட நிகழ்வுகளின் பயணத்தில் இன்று நான் ..
அவள் எனதில்லை எனினும்
எனதே எனதான செல்ல மகளை
நொடிக்கு பலமுறை அழைக்கிறேன்
என் காதலை கேட்க தவறிய என் காதலியின் பெயரால் !!
மரித்து போன காதலேயாகினும் மறக்க முடியாத நினைவுகளில் என்றுமே நான் ..

Sunday, October 17, 2010

என் நிலை..


நிலவோடு தேய்கிறேன் ,
கனவோடு கரைகிறேன்,
உயிரோடு அஸ்தமாகிறேன்,
மெழுகோடு உருகினேன் ,
மழையோடு கலங்கினேன் ,
கண்ணீரோடு வீழ்ந்தேன் ,
காற்றோடு தவிக்கிறேன் ,
மௌனமோடு உலவுகிறேன் ,
நீ இன்றி என் நிலை இது !
நான் இன்றி உன் நிலை இனிது !
இருந்தும் கூட உன் நினைவுகளில் ஜீவிக்கிறேன்..

Tuesday, October 12, 2010

கடைசி நாளான அன்று..


அண்மையில் ஏற்பட்ட கௌதமின் மறைவிற்கு சமர்ப்பணமாய் இந்த பதிவு ...


பழைய நிகழ்வுகள் புதைந்து ,
புதிய கனவுகள் புகுந்து ,
அம்மாவின் செல்ல முத்தத்தோடு,
தந்தையின் அன்பான அரவணைப்போடு ,
தொடங்கியது அவன் வாழ்வில் மீண்டும் ஒரு நாள் !

எத்தகைய அடைமழைக்கும் இறுதி மழைத்துளி உண்டு ,
பளிச்சென வெளிச்சமூட்டும் பகலுக்கும் இரவு உண்டு ,
குலுங்க குலுங்க சிரிக்கும் சிரிப்பிலும் ஒருதுளி கண்ணீராது உண்டு ,
ஏன் இப்படி கடவுளின் ஒவ்வொரு படைப்பிலும் ஓர் இறுதி ?!!

மகனின் வருகையை காத்திருந்த பெற்றோர் ,
தோழனின் கரத்தை பிடிக்க எண்ணி காத்திருந்த நண்பர்கள்,
பலகோடி சிந்தனை செதுக்கள்களுடன் இருந்த அவனது மனம் ,
இப்படி எதையுமே பொருட்படுத்தாமல்
கண் சிமிட்டும் மணிப்பொழுதில் நடந்த அந்த அகோர விபத்து
எதிர்பாராமல் அவன் வாழ்வின் கடைசி நாளாய் அந்நாள் :(
உயிரை இறுக்கி நெருக்கிய கடைசி நிமிடங்கள் ,
சுவாசத்திற்கு சிக்காமல் சீறிச் சென்ற காற்று ,
உறைந்து போய் உதவ மறுத்த மனிதர்கள் ,
பல நாள் கூடவே ஓடிய வாகனம்
கையை விட்டு ஓடிய அவலம் ,
இப்படி அனைத்தும் அவனுக்கு கைகொடுக்காத நிலை !

உறங்காமல் வளர்த்த பெற்றோரின் வலி ,
விரல் தொட்டு விளையாடிய சகோதரர்களின் ஏக்கம் ,
உயிருக்கு உயிராய் இருந்த நண்பர்களின் கண்ணீர் ,
அவன் நின்ற இடம் தொட்டு நினைவோடு சருகிச் செல்லும் காலம் ,
இவையனைத்திற்கும் கடவுளின் பதில் தான் என்ன ?!

விழிவிளிம்பில் விழுகின்ற கண்ணீர் சப்தம் ,
மனக்கூண்டில் வந்து வந்து போகும் அவனது புகைப்படம் ,
செவியின் வாசலில் அவன் பேசிய சொற்களின் ஒலி,
இப்படி உயிரில்லா உணர்வுகளை கொடுத்துவிட்டுச் சென்றாயே !

உன்னோடு உறவாடிய நினைவுப்பந்தலில்
இன்று அனைவரும் உலவுகிறோம்..
உனது உயிர் பிரிந்தது எனினும்
அனைவரின் உள்ளங்களில் ,
உயிர் தோழனாய் ,
ஆசை மகனாய் ,
பிடித்த மாணவனாய்,
நல்ல ஆன்மாவாய் என்றுமே வாழ்கிறாய்..!

Saturday, October 9, 2010

நீ எனதாக !


விண்மீனாக ஆசைப்படுகிறேன்,
எந்நேரமும் உன்னை பார்த்து கண் சிமிட்ட!
தென்றலாக வேண்டுகிறேன்,
உன்னை அனுமதியின்றி தழுவும் அந்த உரிமைக்காக!
மழைத்துளியாக தவிக்கிறேன்,
உன் கரங்களில் என்னை நீ சேமிக்கும் அந்த ஒரு நொடிக்காக!
சாலையாக எண்ணுகிறேன்,
உன் பாதச்சுவடுகளின் பிறப்பை என் மீது ஏற்க!
பூவாக பூக்க நினைக்கிறேன்,
நீ பறித்து முத்தமிடும் உரிமையை எனக்கே சொந்தமாக்கிக்கொள்ள!
காகிதமாக தவிக்கிறேன்,
நீ எழுதும்போதெல்லாம் உன் முகத்தின் அழகை என் மீது பதிக்க!
மேகத்தால் திரையிடப்பட்ட வானமாய் இருக்க ஆசைப்படுகிறேன்,
ஒரு முறையாது நீ அறியாமலே உன் எண்ணங்களை திருடிச் செல்ல!
நீ எனதாகவே இருக்க போராடுகிறேன்
நீயும் நம் நினைவுகளும் என்றுமே எனதாகவே இருக்க !