Sunday, September 20, 2009

காதல் !




காதலை சொல்ல தவித்த நாட்கள் அவை
சொல்ல தைரியமின்றி ,,,

அலைகளை அனுப்பினேன்
அலைகளும் உன்னை பார்த்து
சொல்ல முன்வந்து வந்து பின் வாங்கின

சரி என்று

மேகத்தை அனுப்பினேன்
மேகமும் உன்னிடம் காதலை சொல்ல முடியாமல்
மழையாய் பொழிந்தது

சரி என்று

புறாக்களை அனுப்பினேன்
புறாக்களும் உன்னை தவிர வேறு எல்லா இடத்துக்கும்
பறந்தது

சொல்ல வார்த்தைகள் இன்றி
தவித்து கொண்டிருந்தேன்

ஒரு நாள் தைரியம் பிறந்தது
ஒரு மேகம் சூழ்ந்த நாளில்
உன்னை நோக்கி
உன் பாதைகளை
பின் தொடர்ந்து
நடந்து வந்தேன்

நடந்து கொண்டிருக்கும் வேளையில்
சற்றென்று மழை பெய்தது ...

நீ திரும்பி பார்த்தாய்
நீ என்னை அழைத்தாய்
மழை நம்மை குடைக்குள் இணைத்தது...

இடி நம் கரங்களை
இருக்க பிடிக்க செய்தது ..

மழைக்கு நன்றி கூறிய வாறே
எப்படி சொல்ல என்று
யோசித்து கொண்டிருந்த வேளையில் ,,,
நீ சற்றும் பதறாமல்
பயபடாதே என்று உன் அழகிய குரலில் கூறினாய்

நம் நடை பயணம் முடிவடையும் வேளையில்
அன்றும் சொல்ல முடியாமல் போனதே
என்று எண்ணி உன்னை பார்த்தேன்

நீ சிறிய மௌனத்திற்கு பின்
நம் காதலை இணைத்த மழை மீண்டும்
வர ஆசை என்று கூறினாய்..
அப்போது தான் உனக்குள்ளும் காதல் இருந்ததை உணர்ந்தேன் ...

நீ சொன்னதை கேட்டதும் இன்ப அதிர்ச்சி
வாகனங்களின் சப்தம் கூட இசையாய் ஒலித்தது ...

வீடு திரும்பியதும் , ,,
அன்றைய பொழுது முடிவதில் ஏனோ தயக்கம்
உறக்கத்தில் கண்களை மூடினேன்
ஆகினும் இதய துடிப்பு உனக்காகவே துடித்தது ...

அப்போது உணர்ந்தேன்
சொல்ல மறந்த காதல் ஆகிவிடுமோ
என்று தவித்த வேளையில் ,,,
சொன்னால் தான் காதல் என்பதை
அறிந்திருந்தால்
இன்னும் அதிகம் நாள்
உன்னுடன் காதல் வாழ்வில் வாழ்ந்திருக்கலாமே என்று !!

1 comment:

  1. adhiga naal kadhal vazhvil vazhndhirukalamee!!

    kandippa... bt still... sollamal kaadhalipadhum sugam than!!

    ReplyDelete