Thursday, September 3, 2009

அம்மா






கருவறையில் உயிர் கொடுத்தாய் ...
உன் கருவிழியில் என்னை நிறைத்து ...
கண்களை காக்கும் இமைகளாக உள்ளாய் ..
உன் அன்பு கவலைகளை ,
சுவாசிக்க மற்றும் அல்ல
நேசிக்கவும் கூட தான் கற்று கொடுத்தது ....
தாயில் சிறந்ததோர் கோவில் இல்லை
என்று சொல்வார்கள் ,
என் கண் கண்ட தெய்வம் நீ தானே அம்மா !!
உன் கரம் கோர்த்து நடை பயின்றேன் ,
என் சுவாசம் என்னை விட்டு பிரிய பயிலும் வரை,
என்றென்றும் இருப்பேன் உன்னுடன் ..
என்றும் மாறாத என் அன்புடன் !

No comments:

Post a Comment