Sunday, September 20, 2009

நான் மிகவும் ரசித்த கடல் !!




காற்று பலமாக வீசியது ,
தென்றல் தீண்டியது ,
சிறு மழை துளிகள் பெரு மழை ஆகிய தருணம் ,
அலைகள் வந்து தீண்ட காத்திருந்தேன் கரையில் ..
சில நொடியில் அலைகளோடே இணைந்து விடுவேன்
என்பதை அறியாமலே !
கடலே ,
சிப்பி உயிர் கொடுத்த முத்துக்களின் பிறப்பிடமாய் ,
பல உயிரினங்களுக்கு பிறப்பிடமாய் ,
பல காதலர்களின் காதலுக்கு பிறப்பிடமாய் ,
இருந்த நீ ,
பல மனிதர்களுக்கு இறபிடமாயும் ஆனாயே !
வசந்தம் மட்டுமே வந்த உனது பாதையில் ,
சுனாமி என்னும் புயலும் வீசியதே .
கசக்கும் நினைவுகளை கொடுத்துவிட்டு சென்றதே..
உனக்குள் ஏன் இந்த வெறி ??
ஒரு வேளை நீ மகிழ்ச்சியாய் இருப்பதால் தான்
கொந்தளிக்கிறாயா ?
இல்லை
உன்னை தீண்டும் மனிதர்களை ,
தடுப்பதற்கு கொந்தளிக்கிறாயா ?
கொந்தளி வேண்டாம் என சொல்லவில்லை ..
எங்களின் துன்பம் கொந்தளிக்காத வரை கொந்தளி..
கசக்கும் நினிவுகளை கொடுத்து சென்றாய் ..
எனினும் உன் அபிநயத்தில் மயங்கி ,
கசக்கும் நினைவுகளை மறந்து ,
மீண்டும் அலைகள் வந்து தீண்ட காத்திருகின்றேன்
நீ அடித்து செல்ல மாட்டாய் என்ற நம்பிக்கையில் ?!!

No comments:

Post a Comment