Tuesday, September 22, 2009

சொல்லப்படாத காதல் !




உன் விழியினில் என் பிம்பம்
தெரிந்தபோது உணர்ந்தேன்
உன் பார்வையில் நான் உரைந்திருக்கிறேன் என்பதை !
நாம் பேசிய ஆயிரம்கோடி வார்த்தைகளின்
நடுவில் துளிர்விட்ட உனது சிறிய
மௌனத்தில் ,
உன் விழிகள் பேசிய ஆயிரம்கோடி மொழியில் ,
உணர்ந்தேன் எனக்கான உன் காதலை !
பிரியும் வேளையில் உன் கண்களின் ஓரம்
கசியும் கண்ணீர் துளியில் உணர்ந்தேன்
உன் கண்ணீரில் கூட என் உயிர் உலவுவதை !
நிகழ்வுகளை விழி மூடி யோசித்தபோது உணர்ந்தேன்
இருளை அல்ல
உன் பிம்பம் என் நினைவுகளிலும் ஊடுருவதை !
காதலை சொல்லாமல் கொள்ளாமல்
பயணிக்கும் காதலர்களாய் !!

No comments:

Post a Comment