Sunday, September 20, 2009

வாழ்க்கையை காதலிப்போமே!




அன்றாட வாழ்வில்
விழிக்க மறுக்கும் விழிகளுடன்
போராட்டத்தை வென்று
இமைகளை துறந்து,
மீண்டும் ஒரு புதிய நாளின் பயணத்தில் ,
பார்வையில் ஒரு புதிய தேடல்,
கால்களில் புதிய ஓட்டம்,
மனதினில் பலவித வாக்குவாதங்கள்
என நாட்கள் நகர்கிறது ..
இத்தனை பரபரப்பில்
இயற்கையின் அழகு,
சூரியனின் வருகை ,
பூக்களின் மலர்ச்சி,
வயல்வெளியின் பசுமை ,
சாலையோர பூக்கள் ,
மெருகூட்டும் மலைச்சாரல் ,
மெல்லத்தலுவும் தென்றல் ,
பறவையின் ஓசைகள் ,
பூக்களின் மொழிகள் ,
மேககூடங்களின் ஒற்றுமை ,
கோவில் மணி ஓசை ,
வானவில்லின் வண்ணச் செழிப்பு ,
வண்ணத்து பூச்சியின் அழகு ,
மழலையின் சிரிப்பு ,
முகம் தெரியாதவர்களின் புன்னகை ,
எதிர்பாராத சந்திப்பு ,
சூரியன் மறையும் போது இன்னொரு நிற வானின் பிறப்பு,
நிலவின் சிரிப்பு ,
கண்ணடிக்கும் நட்சத்திர கூட்டங்கள் ,
அபூர்வமாக தோன்றும் வான வேடிக்கைகள் ,
வாழ்வின் அழகு தான் எத்தனை ?!?!?!
வாழ்வின் அழகிய தருணங்கள் இவை தானோ?
நின்று பார்க்க நேரம் இன்றி
சென்று கொண்டே இருக்கிறோம் ...
அழகை ஆராதிக்க ,
இயற்கையை வர்ணிக்க ,
ஒரு நொடி உலகம் நின்றது என எண்ணி
திரும்பி பார்ப்போமே!!
உயிரோடு இருக்கும் இந்த பிரபஞ்சத்தில் ,
வாழ்கையை காதலிபோமே !!
சில நோடிகலாது துக்கங்களை மறந்து !!

No comments:

Post a Comment