Saturday, August 29, 2009

நினைவுகளின் பயணத்தில் !!


மேகமாய் இருந்து என் கண்ணீரை
உன்னுள் அடைத்தாய்...

கவிதையாய் தோன்றி நான் சொல்ல
தவறிய வார்த்தைகளை
சொற்களாய் பொலிந்தாய்...

மழையாய் மாறி என்னை
உன் அன்பு மழையில் நனைத்தாய்...

வானவில்லாய் மாறி
உயிரிழந்த என் வாழ்விற்கு
வண்ணங்கள் சேர்த்தாய்...

கடலாய் மாறி
ஓய்ந்து போன என் உள்ளத்தில்
அலையாய் எழுந்து
என்னையும் எலவைத்தாய்...

சிறை செய்து வைத்த
என் எண்ணங்களை
பறவையாய் மாறி
பறக்க விட்டாய்...

தனிமையில் தவித்த தருணங்களில்
கனவாய் தோன்றி
என் தனிமையை போக்கினாய்...

கவலை சூழ்ந்த வேளையில்
மலராய் மாறி
வாழ்விற்கு வசந்தம் தந்தாய்...

நான் சொல்லாமலே
என்னை அறிந்திருந்த நீ ,,,,
எப்போதும் நீ என்னுடன் இருக்க வேண்டும் என்று நான்
சிந்திப்பதையும் அறிந்து
என்னுடன் இருப்பாய்
என்று எண்ணினேன்
என்னோ சில கஷ்டத்தில்
என்னை நீ பிரிந்து சென்றாய் !!!!!
அப்பொழுதும் கூட என்
துயரத்தை அறிந்திருந்த நீ ,
பிரிந்து சென்றாலும் கூட ,
உன் நினைவுகளை என்னிடம் விட்டுச் சென்றாய் !!!
உன் நினைவுகள் போதும்
பல யுகம் வாழ்வதற்கு !!!
என்றும் உன் நினைவுகளுடனே பயணிக்கிறேன் !!

No comments:

Post a Comment