Sunday, November 15, 2009


அண்மையில் ஒரு வார இதழில் படித்தேன் ஒரு நிகழ்வை..அதில் என் மனதில் தோன்றிய கவிதை இது ...

நாம் காதாலர்கள் அல்ல
எனினும்
அழிவில்லாத அன்பை பரிமாறிக்கொள்கிறோம் !
உறவின் ஆயுளை நாம் அறியோம்
எனினும் நம் ஆயுளின் எல்லையை கடந்த புரிதலை பகிர்கிறோம் !
மண்ணின் மீது கொண்ட காதலால்,
பூக்கள் உதிர்வதை போல ,
நாமும் பல முறை சருகுகளாய் வீழ்கிறோம் !
இலையுதிர் காலம் என எண்ணி
மறுபடியும் பூக்கிறோம் புதிதாய் !
நம் கவுகள் நிகழ்வுகளாகி,
நிகழ்வுகள் நினைவுகளாகி,
நினைவுகள் முத்திரையாகியும் கூட
பயணிக்கிறோம் ..
நாம் நண்பர்களா ? காதலர்களா ?
என்ற வினாவிற்கு விடை கிடைக்காத புதிராய் !

2 comments:

  1. நன்றி... உனக்கு அல்ல... அந்த வார இதழுக்கு!!!!

    sathiyama chance eh ila.. really nice one.. bt conclusion illama panitiyee!! nway.. conclusion illama irukradhu than nalladhu!!!

    ReplyDelete
  2. ma rommmba alagana kavithai ma:) avlooo nalla eluthiruka.. ne intha kavithai ku potrukara pic um avlo alaga iruku:)

    ReplyDelete