Saturday, November 7, 2009

காலை நேரம்


அழகான காலை வேளை,
ஜன்னலின் வழியே சூரிய ஒளியின்,
மிதமான ஸ்பரிசம் !
வானிலே மிதக்கும் மேகக் கூட்டங்கள்!
விடிந்தும் பிரிய மனமின்றி
இருக்கும் நிலவு!
சற்றும் ஓயாமல் துரு துருவென
சுற்றி திரியும் பறவை கூட்டங்கள்!
விண்மீன் கூட்டங்கள் ஒளியில் மங்கினாலும் ,
வானிற்கு வண்ணங்கள் சேர்க்கும் முயற்சியில் !
இயல்பினை மறந்தேன்
இவை அனைத்தின் வருடலில் !
காயப்பட்ட இதயத்திற்கோ இவைகள்
அறிய மருந்து!
மோட்சம் பெறாத விழிகளுக்கோ ,
இவைகள் அறிய விருந்து !

No comments:

Post a Comment