Tuesday, October 12, 2010

கடைசி நாளான அன்று..


அண்மையில் ஏற்பட்ட கௌதமின் மறைவிற்கு சமர்ப்பணமாய் இந்த பதிவு ...


பழைய நிகழ்வுகள் புதைந்து ,
புதிய கனவுகள் புகுந்து ,
அம்மாவின் செல்ல முத்தத்தோடு,
தந்தையின் அன்பான அரவணைப்போடு ,
தொடங்கியது அவன் வாழ்வில் மீண்டும் ஒரு நாள் !

எத்தகைய அடைமழைக்கும் இறுதி மழைத்துளி உண்டு ,
பளிச்சென வெளிச்சமூட்டும் பகலுக்கும் இரவு உண்டு ,
குலுங்க குலுங்க சிரிக்கும் சிரிப்பிலும் ஒருதுளி கண்ணீராது உண்டு ,
ஏன் இப்படி கடவுளின் ஒவ்வொரு படைப்பிலும் ஓர் இறுதி ?!!

மகனின் வருகையை காத்திருந்த பெற்றோர் ,
தோழனின் கரத்தை பிடிக்க எண்ணி காத்திருந்த நண்பர்கள்,
பலகோடி சிந்தனை செதுக்கள்களுடன் இருந்த அவனது மனம் ,
இப்படி எதையுமே பொருட்படுத்தாமல்
கண் சிமிட்டும் மணிப்பொழுதில் நடந்த அந்த அகோர விபத்து
எதிர்பாராமல் அவன் வாழ்வின் கடைசி நாளாய் அந்நாள் :(
உயிரை இறுக்கி நெருக்கிய கடைசி நிமிடங்கள் ,
சுவாசத்திற்கு சிக்காமல் சீறிச் சென்ற காற்று ,
உறைந்து போய் உதவ மறுத்த மனிதர்கள் ,
பல நாள் கூடவே ஓடிய வாகனம்
கையை விட்டு ஓடிய அவலம் ,
இப்படி அனைத்தும் அவனுக்கு கைகொடுக்காத நிலை !

உறங்காமல் வளர்த்த பெற்றோரின் வலி ,
விரல் தொட்டு விளையாடிய சகோதரர்களின் ஏக்கம் ,
உயிருக்கு உயிராய் இருந்த நண்பர்களின் கண்ணீர் ,
அவன் நின்ற இடம் தொட்டு நினைவோடு சருகிச் செல்லும் காலம் ,
இவையனைத்திற்கும் கடவுளின் பதில் தான் என்ன ?!

விழிவிளிம்பில் விழுகின்ற கண்ணீர் சப்தம் ,
மனக்கூண்டில் வந்து வந்து போகும் அவனது புகைப்படம் ,
செவியின் வாசலில் அவன் பேசிய சொற்களின் ஒலி,
இப்படி உயிரில்லா உணர்வுகளை கொடுத்துவிட்டுச் சென்றாயே !

உன்னோடு உறவாடிய நினைவுப்பந்தலில்
இன்று அனைவரும் உலவுகிறோம்..
உனது உயிர் பிரிந்தது எனினும்
அனைவரின் உள்ளங்களில் ,
உயிர் தோழனாய் ,
ஆசை மகனாய் ,
பிடித்த மாணவனாய்,
நல்ல ஆன்மாவாய் என்றுமே வாழ்கிறாய்..!

3 comments: