Saturday, October 9, 2010

நீ எனதாக !


விண்மீனாக ஆசைப்படுகிறேன்,
எந்நேரமும் உன்னை பார்த்து கண் சிமிட்ட!
தென்றலாக வேண்டுகிறேன்,
உன்னை அனுமதியின்றி தழுவும் அந்த உரிமைக்காக!
மழைத்துளியாக தவிக்கிறேன்,
உன் கரங்களில் என்னை நீ சேமிக்கும் அந்த ஒரு நொடிக்காக!
சாலையாக எண்ணுகிறேன்,
உன் பாதச்சுவடுகளின் பிறப்பை என் மீது ஏற்க!
பூவாக பூக்க நினைக்கிறேன்,
நீ பறித்து முத்தமிடும் உரிமையை எனக்கே சொந்தமாக்கிக்கொள்ள!
காகிதமாக தவிக்கிறேன்,
நீ எழுதும்போதெல்லாம் உன் முகத்தின் அழகை என் மீது பதிக்க!
மேகத்தால் திரையிடப்பட்ட வானமாய் இருக்க ஆசைப்படுகிறேன்,
ஒரு முறையாது நீ அறியாமலே உன் எண்ணங்களை திருடிச் செல்ல!
நீ எனதாகவே இருக்க போராடுகிறேன்
நீயும் நம் நினைவுகளும் என்றுமே எனதாகவே இருக்க !

4 comments:

  1. என்னவாக இருந்தாலும்.. நீ நீயாக இரு.. உண்மையான நட்போ காதலோ.. உன்னோடு இருக்கும்!! :-) ;-)

    ReplyDelete
  2. @suba: நீ யாருங்க ??
    அத சொல்லலையே???????

    ReplyDelete
  3. @bala: hmm naan kandipa enikume maara maaten:-)

    ReplyDelete
  4. @ hannah: enna vambula maati vidurathuke nee plan oda irukiya?? just a kavithai d.. antha nee imaginary ;-)

    ReplyDelete