Friday, April 2, 2010

என்றும் மறப்பதில்லை !



ஒவ்வொரு மனுஷனோட வாழ்க்கை யிலும் கடவுள் நட்பு , காதல் , சொந்தங்கள் அனைத்தையும் செதுக்க மறந்ததில்லை .. உயிரே உறவுகள் தான் என்று என்னும் வேளையில் பிரிவை கொடுக்கவும் கடவுள் மறந்ததில்லை ..பிரிவின் வலி கொடியது தான் அந்த பிரிவிலும் நினைவுகளின் தாக்கம் என்றுமே சுகம் தான் .. வாழ்வின் பயணத்தை பற்றி எண்ணி கொண்டிருந்தேன் அப்போது தோன்றிய கவிதை தான் இது ..

பாலமிட்ட உறவுகளை புயல் அடித்தாலும் ,
பாலம் அமைத்த நினைவுகளை எதுவாலும் அழிக்க முடியாது !
செல்லக் கனவுகளை விழித்ததும் மறந்தாலும் ,
கனவின் பாதச்சுவடை மனம் மறக்க முடியாது !
இளமை கால நிகழ்வுகளை காலம் கடத்தி சென்றாலும் ,
நாடி உள்ளவரை சிறு நிகழ்வையும் கூட நினைவு கூறாமல் இருக்க முடியாது!
எண்ணச் சிறகுகளை எவர் வெட்டி போட்டாலும் ,
விழிகளின் கவி மொழியை எவராலும் அசைக்க முடியாது !
பிரிவு பரிவு காட்ட தவறி ,
நேசித்த உறவுகளை பிரிக்க தவறவில்லை ...
எனினும் அன்பை வானமாய் விரித்துள்ளோம்
என்றோ ஒரு நாள் எங்காவது சந்தித்து விடுவோம் என்ற நம்பிக்கையில் !!
சுனைநீராய் இருந்த வாழ்க்கை ,
பாலைவானமாய் காட்சியளிக்கிறதே !
நினைவோடு உறவாடி நெடுநேரம் பேசிவிட்டேன் ,
நினைவுகளை நினைக்க மறந்தாலும் ,
மறக்க நினைத்ததில்லை ..
மரித்தாலும் மறக்கபோவதில்லை !!

4 comments:

  1. நினைவோடு உறவாடி நெடுநேரம் பேசிவிட்டேன் ,
    kalakureenga madammmmmmmmmmmm

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete