Wednesday, December 16, 2009

கடவுளின் துணை !




பேதமையில் அறிவொழியாய்,
வெற்றியில் உறுதுணையாய் ,
தோல்வியில் ஊக்கமருந்தாய் ,
இருளில் ஜோதியாய் ,
வெயிலில் நிழலாய் ,
அடைமழையில் குடையாய் ,
இடி முழக்கத்தில் சிருஷ்டியாய்,
கண்ணீரில் ஆறுதலாய் ,
சிரிப்பினில் புஷ்பமாய் ,
தனிமையில் பெருந்துணையாய் ,
இதயத்தில் வாசம் பண்ணும் தேவனாய்,
எனக்குள் என்றும் துணையாய் இருக்கிறாய்!

Saturday, December 5, 2009

வாழ்க்கை அழகானது !


முர்களுக்கு நடுவிலும் கூட,
ரோஜா செடி என்றும் அழகு தான் ..
வறண்ட பாலைவனத்திலும் காக்டஸ்
செடி அழகு தான் ..
சுட்டெரிக்கும் சூரியனும்
சுகம் தான் குளிரின் ஆதிக்கத்தின் பொது ..
பாசி படிந்த தண்ணீரிலும் கூட
இலைகளின் தஞ்சம் உண்டு ..
கனியற்ற மரத்திலும் கூட
பறவைகளின் வருகை உண்டு ..
பேய் மலைக்கும் கூட
கடைசி மழைத்துளி உண்டு ..
நம் வாழ்வும் கூட இப்படிதான் ,
நிறைவேறாத கனவுகளும் என்றோ ஒரு நாள் நிஜங்களாகும் ..
சாத்தியமற்ற முயற்சியும் ஒரு நாள் உயிர் பெரும்..
கவலைகளும் முகவரி இன்றி மறையும் ..
வாழ்வின் விழியில் ஒளிந்து கொண்டிருக்கும் அழகை
விழித்து ஆராயுங்கள் ..
வாழ்வை காதலிப்பிர்கள்..
வெறுப்பாய் தோன்றும் வாழ்வும் கூட
இனிமையாய் மாறும் ,
நரகமான தருணங்களும்
சொர்க்கமாய் தோன்றும் ,
வாழ்வின் மீது நாம் கொண்டுள்ள பார்வையை வேறுபடுத்தினால்!

Sunday, November 22, 2009

மழை !


மண்ணின் மீது கொண்ட காதலால் ,
மழை வந்தது !
மழையின் வருகையால்
பூமியின் ஜனனம் இங்கே ,
மேகமோ வீழ்ந்தது
மழையின் பிரிவால் அங்கே,
இப்படி தான் என் வாழ்வும் கூட
நான் வாழ்வதும் வீழ்வதும் உன்னாலே !!

Wednesday, November 18, 2009

வந்தாய் நட்பாய்!


கேட்காமலே நனைத்துவிட்ட
மழைத்துளியை போல் ,
உதிர்ந்த பின்பும் மரமிடையே
மீண்டும் புதிதாய் பூக்கும் பூக்களை போல் ,
சங்கில் சத்தமின்றி நுழையும்
காற்றை போல் ,
புல்லிதழில் புறப்பட்ட பனித்துளியின்
யாத்திரையை போல் ,
சரிந்த பின்பும் சுவாசம் உட்புக
ஆடும் மரங்களை போல் ,
இதழ்கள் அசைக்காமலே
மனதில் கேட்கும் இசையை போல் ,
ஓசைகள் ஏதுமின்றி ,
அழைப்புகள் ஏதுமின்றி ,
ஆசைகள் ஏதுமின்றி ,
கனவுகள் ஏதுமின்றி ,
எதிர்பாராத புயலாய் வந்தாய் ..
ஒழிந்திருந்த கனவுகள் எல்லாம்
கைகூடி மத்தாளம் போட்டு நிஜங்களாகும் வண்ணம் ,
நிராசைகளெல்லாம் நிறைவேறும் வண்ணம் ,
செவிடானாலும் உன் ஓசைகள் கேட்கும் வண்ணம் ,
கண்ணீரிலும் என் இதழ்கள் சிரிக்கும் வண்ணம் ,
வந்தாய் என் வாழ்வில் நட்பாய்!
வாழ்வை மாற்றினாய் தித்திப்பாய் !
இப்படியே உரைந்திட ஏங்கிடும் ,கனவாய்!
நம் அன்பென்னும் யாத்திரை
என்றும் தொடரும் மகிழ்ச்சியாய்!

Sunday, November 15, 2009


அண்மையில் ஒரு வார இதழில் படித்தேன் ஒரு நிகழ்வை..அதில் என் மனதில் தோன்றிய கவிதை இது ...

நாம் காதாலர்கள் அல்ல
எனினும்
அழிவில்லாத அன்பை பரிமாறிக்கொள்கிறோம் !
உறவின் ஆயுளை நாம் அறியோம்
எனினும் நம் ஆயுளின் எல்லையை கடந்த புரிதலை பகிர்கிறோம் !
மண்ணின் மீது கொண்ட காதலால்,
பூக்கள் உதிர்வதை போல ,
நாமும் பல முறை சருகுகளாய் வீழ்கிறோம் !
இலையுதிர் காலம் என எண்ணி
மறுபடியும் பூக்கிறோம் புதிதாய் !
நம் கவுகள் நிகழ்வுகளாகி,
நிகழ்வுகள் நினைவுகளாகி,
நினைவுகள் முத்திரையாகியும் கூட
பயணிக்கிறோம் ..
நாம் நண்பர்களா ? காதலர்களா ?
என்ற வினாவிற்கு விடை கிடைக்காத புதிராய் !

நீ

நேசிக்கும் உறவாய் நீ ,
சுவாசிக்கும் காற்றாய் நீ,
ரசிக்கும் இசையாய் நீ ,
உணரும் ஸ்வரமாய் நீ,
கனவுகளின் கருவாய் நீ,
மௌனத்தின் மொழியாய் நீ ,
என் எழுத்துக்களின் மூலாதாரமாய் நீ,
என் புன்னகையின் பிறப்பிடமாய் நீ,
என் கண்ணீரின் முடிவாய் நீ,
என் இதயத்தின் துடிப்பாய் நீ ,
நீ இன்றி நான் ஏது?
நாம் இன்றி வாழ்வேது ?

Saturday, November 7, 2009

காலை நேரம்


அழகான காலை வேளை,
ஜன்னலின் வழியே சூரிய ஒளியின்,
மிதமான ஸ்பரிசம் !
வானிலே மிதக்கும் மேகக் கூட்டங்கள்!
விடிந்தும் பிரிய மனமின்றி
இருக்கும் நிலவு!
சற்றும் ஓயாமல் துரு துருவென
சுற்றி திரியும் பறவை கூட்டங்கள்!
விண்மீன் கூட்டங்கள் ஒளியில் மங்கினாலும் ,
வானிற்கு வண்ணங்கள் சேர்க்கும் முயற்சியில் !
இயல்பினை மறந்தேன்
இவை அனைத்தின் வருடலில் !
காயப்பட்ட இதயத்திற்கோ இவைகள்
அறிய மருந்து!
மோட்சம் பெறாத விழிகளுக்கோ ,
இவைகள் அறிய விருந்து !