Wednesday, September 29, 2010

நம் நட்பு


காரிருள் சூழ்ந்த பொழுதிற்கு ,
ஒளியேற்றிய சூரியனாய் ..
அசைவின்றி அயர்ந்த பொய்கையை ,
எழுப்பிய முதல் கல்லாய் ..
கற்களை செதுக்கிய சிற்பிக்கு ,
வடிவம் கொடுத்த உருவமாய் ..
மேகத்தின் சுமையை குறைத்த,
முதல் மழைத்துளியாய் ..
கருப்பு வெள்ளை படலம் கொண்ட வானத்திற்கு ,
வண்ணங்களை சேர்த்த வானவில்லாய் ..
உறைந்த நேரத்தை கடத்திச் செல்லும்
கடிகார முள்ளாய்..
உதிர்ந்த பூக்களை அரவணைக்கும்
பூமியாய் வந்தாய் என் வாழ்வில் மெல்லிசையாய் !
என் புன்னகையின் ரசிகனாய் ,
என் அழுகையின் எதிரியாய் ,
என் தேடல்களின் துணையாய் ,

என் புலம்பல்களுக்கு செவியாய்,
நான் அறியாத உலகிற்கு விழிகளாய் ,
என் இதயத்திற்கு உயிராய் ,
என் வாழ்வின் இறுதிவரை நீ வேண்டும் நட்பாய்..
ஒவ்வொரு நிமிடமும் பொக்கிஷமாகும்
நம் நட்பின் பயணத்திலே இன்று !
இன்று மட்டும் அல்ல என்றென்றுமே !!

Monday, August 23, 2010

சாலையோர காகிதம் !


தினம் தினம் பலகோடி காகிதங்களை சாலையில் காண்கிறோம் ,
என்றுமே அதனை நாம் சிந்திக்க தவறிவிடுவோம் ..அதனை பற்றிய கவிதை தான் இது ,

கைகளில் சிறையாய்,
காலடியில் சருகாய் ,
குப்பையில் ஜடமாய் ,
இருக்கும் காகிதத்தில் உள்ள உயிர் தான் என்ன ?!

விழியில் தொடங்கி ,
வழியில் முடிந்த
காதல் காவியமாக கூட இருக்கலாம் !
தினம் தினம் சேகரித்த காதல் ,
இன்று பறக்கும் காகிதமாய் ,
பறக்கும் திசை தெரியாமல் சாலையில் !!

நண்பனின் கையெழுத்தை ,
பொக்கிஷமாய் சேகரித்த முத்தாய் கூட இருக்கலாம் !
அருகாமை தான் என்றும் கிடைப்பதில்லை
அவன் செதுக்கிய எழுத்துக்களையாது சேகரிக்க
எண்ணிய மனதின் வலி தான் என்னவோ?!

இயற்கையின் துணையில் ,
காற்றின் வீச்சில் ,
காகிதத்தை நனைத்த மழையை
அன்போடு இழுக்கும் சூரியனின் சக்தியில் ,
காகிதம் ஓவியமாகவே இருப்பிடம் செல்ல வேண்டுகிறேன் !
சென்றாலும் செல்லாவிட்டாலும் ,
இருப்பது சாலையாகினும், குப்பைத்தொட்டியாகினும் ,
நம் மனதின் எண்ணங்களை என்றுமே கொட்டும்
அந்த காகிதம் என்றுமே ஓவியம் தான் !!

Wednesday, July 21, 2010

பிரிவு



பிரிவை எண்ணி வருந்திய வேளையில் தோன்றிய கவிதை தான் இது .. வசந்த காலமான இந்த அழகிய வாழ்வுக்கு பின்னால் தோன்றும் உணர்வுகள் தான் இவை :(


எங்கோ பிறந்தோம் ,
எங்கோ வளர்ந்தோம் ,
கல்லூரி என்னும் பாலத்தில் நண்பர்களாய் இணைந்தோம்..
மகிழ்வை பகிர்ந்து கொண்டோம் ,
இன்று பிரிவையும் பகிர்கிறோம் :(..
வசந்தம் மட்டுமே வந்த பாதையில் ,
பிரிவு என்னும் புயலும் வீசுகிறது ..
கசக்கும் நினைவுகளை இதயத்தில் பதிக்கிறதே!
ஒன்றாய் சென்றோம் ,
இமைக்க நேரம் இன்றி சிரித்தோம் ,
கை கோர்த்து பயணித்தோம் ,
வண்ணத்து பூச்சிகளாய் பறந்தோம் ,
உணவுகளை பகிர்ந்தோம் ,
உணர்வுகளையும் பகிர்ந்தோம் ,
இணை பிரியாத உறவுகள் ஆனோம் ..
அழகிய தருணங்களை ஏற்படுத்திய கடவுள்,
ஏனோ பிரிவையும் வாழ்வின் அங்கமாய் வடிவமைத்துவிட்டார்.
கல்லூரி வாழ்வின் கடைசி நாளான அன்று ,
இலையுதிர் காலமென
இயம்பக் கேட்டதுண்டு
மரங்களே உதிர்ந்திடும்
மாயமும் கண்டோம் அன்று ...
இனி எக்கணம் சந்திப்போமோ
எவ்வண்ணம் சந்திப்போமோ ?
நினைவுத்தென்றல் வீசுகையிலெல்லாம் ,
வருடும் ஒவ்வொரு காற்றின் ஸ்பரிசத்திலும்
நினைவுகூர்ந்து கொண்டே தான் இருப்போம்
பழைய காற்றின் நினைவுகளை !
பிரிவை ஏற்க மனமில்லை
எனினும் வாழ்வை ஏற்பதை விட வேறு வலி இல்லை..
நினைவுகளின் பயணத்தில் என்றுமே மங்காத புன்னகையுடன்
!

Tuesday, May 25, 2010

சுகமான வலிகள் ..


இன்பங்களை ஏற்படுத்தி தந்தது நீ தான் ,
மனவலிகளை கொடுத்ததும் நீ தான் ,
முட்களின் வலி கொடியது தான் ..
எனினும் ஒரு போதும் ரோஜா அதை பிரிய நினைத்ததில்லை !!
வலிகளை மறக்க நினைக்கிறேன் முடிவதில்லை :(
வலிகளை மட்டும் தான் உன்னை அல்ல !!
இன்பங்களை சேகரித்த நினைவேட்டில் ,
என் விழிகளை நனைத்த இந்த வலிகளையும்
கூட சேகரிக்கிறேன்..
நீ தந்த வலிகள் கூட சுகம் தான் என்பதற்கு சாட்சியமாய் ..!

Thursday, April 22, 2010

எனக்காய் !!


என் தோழி என்னை பற்றி எழுதிய கவிதை.. மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது இதனை பார்த்து.. அருமையாக கவிதை எழுதுவாள்.. காகிதங்களில் மட்டும் அல்லாமல் அதனை ப்ளாக்- லயும் சேகரிக்க எண்ணினேன் ... இதோ அந்த கவிதை ...

சுபமே !
உன்னை பற்றி கவிதை எழுதி கேட்டாய்
விரிந்து கிடக்கும் வானத்தை
பற்றி எழுத நான் ஒன்றும் கம்பன் அல்ல!
எனினும் எழுத முயற்சிக்கிறேன் ..
வார்த்தைகளை தேடி கொண்டே !

உன்னை முதல் முதலில் பேருந்தில் தான்
சந்தித்தேன் ..
அப்போது புரியவில்லை நீ
என் வாழ்க்கை பயணத்திலும் வருவாய் என்று !

உன்னை பார்த்து வியந்த நிமிடங்கள் சில
உன்னை பார்த்து மகிழ்ந்து நகைத்த நிமிடங்கள் பல ..
வியந்த நிமிடங்கள் ..
பலர் உன் பேச்சிற்காக புகழ்ந்த போது ..
ஏன் நானும் கூடத்தான் !!
நகைத்த நிமிடங்கள் ...
உன் செல்ல குறும்புகளின்
நகைச்சுவை பந்தியில் !!

உன் கண் அசைவுகளில்
உணர்ந்தேன்
உன் தனிமைகளை ,
இனிமைகளை ,
உன்னை இறுதியில் !!

உன்னை இறுதியில் அறிந்தாலும்
இறுதி வரையில் உன்னுடன் இருப்பேன்
இறுதி வரை என்றால் என் இறுதி வரை !!

உன் திருமணத்தை பார்க்க
ஆசை என்று கூற மாட்டேன் !
ஆனால் உன் பேத்தியின் கல்யாணத்திலும்
உன்னை பார்க்க ஆசை ...

என் ஆசை நிறைவேறும்
நிச்சயமாக ..
அதுவரை சுகமாய் இருக்க
என் சுபத்திர்க்கு !!

நட்பு


இந்த கவிதை அன்பு பரிசாய் என் நண்பன் அழித்தது.. இது அவன் சொந்த படைப்பு இல்லை எனினும் பிடித்தது ..

மூன்று எழுத்தில் மனசும் மனசும் பேசி கொண்டல்
வார்த்தை கிடையாது .
முகம் பார்க்காமல் பேசும் நட்புக்கு
பிரிவு கிடையாது ..

உறவை நேசிப்பதை விட
உள்ளத்தை நேசித்து பார்
நீ நேசிக்கும் உள்ளம் கோபம்
கொண்டாலும் சுகமாக தோன்றும் ..

உயிருக்கு உயிராய் இருந்து
உயிரை வாங்கும் காதலை விட
உயிருக்கு உயிராய் இருந்து
உயிர் கொடுக்கும் நட்பு மேலானது ..

நான் உனக்கு உயிர் தோழனாக
இல்லாமல் இருக்கலாம் ,
ஆனால் என் உயிர் உள்ளவரை
நல்ல தோழனாக இருப்பேன் ...

Friday, April 2, 2010

என்றும் மறப்பதில்லை !



ஒவ்வொரு மனுஷனோட வாழ்க்கை யிலும் கடவுள் நட்பு , காதல் , சொந்தங்கள் அனைத்தையும் செதுக்க மறந்ததில்லை .. உயிரே உறவுகள் தான் என்று என்னும் வேளையில் பிரிவை கொடுக்கவும் கடவுள் மறந்ததில்லை ..பிரிவின் வலி கொடியது தான் அந்த பிரிவிலும் நினைவுகளின் தாக்கம் என்றுமே சுகம் தான் .. வாழ்வின் பயணத்தை பற்றி எண்ணி கொண்டிருந்தேன் அப்போது தோன்றிய கவிதை தான் இது ..

பாலமிட்ட உறவுகளை புயல் அடித்தாலும் ,
பாலம் அமைத்த நினைவுகளை எதுவாலும் அழிக்க முடியாது !
செல்லக் கனவுகளை விழித்ததும் மறந்தாலும் ,
கனவின் பாதச்சுவடை மனம் மறக்க முடியாது !
இளமை கால நிகழ்வுகளை காலம் கடத்தி சென்றாலும் ,
நாடி உள்ளவரை சிறு நிகழ்வையும் கூட நினைவு கூறாமல் இருக்க முடியாது!
எண்ணச் சிறகுகளை எவர் வெட்டி போட்டாலும் ,
விழிகளின் கவி மொழியை எவராலும் அசைக்க முடியாது !
பிரிவு பரிவு காட்ட தவறி ,
நேசித்த உறவுகளை பிரிக்க தவறவில்லை ...
எனினும் அன்பை வானமாய் விரித்துள்ளோம்
என்றோ ஒரு நாள் எங்காவது சந்தித்து விடுவோம் என்ற நம்பிக்கையில் !!
சுனைநீராய் இருந்த வாழ்க்கை ,
பாலைவானமாய் காட்சியளிக்கிறதே !
நினைவோடு உறவாடி நெடுநேரம் பேசிவிட்டேன் ,
நினைவுகளை நினைக்க மறந்தாலும் ,
மறக்க நினைத்ததில்லை ..
மரித்தாலும் மறக்கபோவதில்லை !!