Saturday, January 9, 2010

நினைவுகள்


நடந்து சென்ற பாதை
நீண்டு கொண்டேயிருக்கிறது,
முடிவில்லாமல் ...

நாம் பேசி சிரித்த
நொடிகளுக்கு சாட்சியாய்
நின்ற மரங்கள் !
அதனிடமும் மௌனம் ?!!

நாம் அமர்ந்த சாலையோர இருக்கைகள் ,
நான் தனியே வருவேன்
என அறிந்ததோ என்னவோ?!
அதிலும் ஒரு சேதம் !
நீ இன்றி தனித்து வந்த வருகையை
சற்றும் எதிர்பார்க்காத இருக்கை!!

நாம் சென்ற பாதையில்
நம் சுவாசம் நிறைந்த காற்றில்
இன்று ஒரு வெறுமையை கண்டேன் !
காற்றும் கூட உன் தேடலில்தான்
சுற்றித்திரிகிறது ஓயாமல் !!

நாம் சென்ற போது
இசையை ஒலித்த
பறவைகளின் சப்தம் ,
இன்று அவைகள் கூட
என் செவியில் சோகமாய் !
யாருக்கு தெரியும்?
அந்த பறவைகளின் பேச்சு கூட
நம்மை பற்றியதாக இருக்கலாம் ?!

உன் பார்வை காட்டிய பரிவு,
உன் அன்பில் நனைந்த கோவம்,
உன் புன்னகையில் நிறைந்த உன் மொழிகள் ,
உன்னை என் நிழலாய்
உணர வைத்த உன் காதல்,
அனைத்தையும் எண்ணி கரைந்த நொடிகள்
நொடிகள் மட்டும் அல்ல கண்ணீரும் கூடதான்!

வெகு தொலைவில் ,
வானம் முடியும் புள்ளியில் ,
மறைந்து போனது பகல் ,
உன்னைப் போலவே!!
முடிந்து போன நம் பயணம் ஒரு பக்கம் ,
தொடர்ந்த உன் நினைவுகள் மறுபக்கம் !
இன்றும் உன் நினைவுக
ளில்..
என்றும் முடிவடையாத பயணமாய் !

3 comments:

  1. hey superbbb maa...முடிந்து போன நம் பயணம் ஒரு பக்கம் ,
    தொடர்ந்த உன் நினைவுகள் மறுபக்கம் ! kalakura po.... but epa ithula nadanthuchu???????????????? solave ilaaaaaaaaa....kallli...

    ReplyDelete
  2. really awesome akka. superb.........

    ReplyDelete