Saturday, October 24, 2009

காதலர்களின் பொய்கள் !




பிரிவின் தாக்கத்தின் போதும் ,
கண்கள் கலங்கும் போதும் ,
கண்ணில் தூசி விழுந்து விட்டது என்ற பொய் !
நினைவுகளின் தாக்கத்தால்
கனவுகளின் தொல்லையால்
விழித்திருந்துவிட்டு
தூக்கமில்லை என்ற பொய் !
சண்டை சச்சரவுகளில் இருந்துவிட்டு ,
ஏன் சோகமாய் இருகிறாய் என்று கேட்கும் தோழியிடம் ,
மனசு சரி இல்லை என்ற பொய் !
எத்தனை பொய்கள் தான் கூறுவாய்
என்று கேட்கும் மனதிடம்
என் காதலை மறக்கும் வரை
என்று மனதிடமும் பொய் !
காதல் மெய்யாகும் போது
பொய்களும் மெய்யாகுமே !

No comments:

Post a Comment