Wednesday, May 2, 2012

நித்தமும் பலமுறை கூறுவாய்
என்னை நன்கு படித்தது நீ மட்டுமே என்று!
ஆனால் நானோ,
என்னை நீ அறிந்தது அவ்வளவு தான் என்று எண்ணுவேன்!
நான் சிரித்து மட்டுமே பார்த்திருக்கிறாய்
நொடிக்கு கண் சிமிட்டுவது பழக்கமானது போல்,
கண்ணீரிலும் சிரிப்பது பழக்கமாகிவிட்டது!
ஏன் சோக குரல் என்று நீ கேட்கும் ஒவ்வொரு முறையும்,
தெரியவில்லை என்பதே என்
பதிலாய் இருந்திருக்கும்
ஆனால் அதற்கு பின் ஆயிரம் இருப்பது உனக்கு தெரியவில்லை!
இன்னுமா என்னை நினைத்து கொண்டிருக்கிறாய் ?
என்று வினவும் உன் விழிகள் ஒரு பக்கம்,
நான் என்ன பைத்தியமா என்று விடையளிக்கும்
என்
விழிகள் மறுபக்கம்!
இந்த வினா விடை பரிமாற்றத்தில்
அழகாய் நாடகம் ஆடிய என்
விழிகள்
முதல் முறையாய் கண்ணீரை வென்று விட்டோம் என்ற பெருமிதத்தில்!
என்னை நீ நன்கு படித்திருந்தால்,
என்னை விட்டு சென்றிருக்கமாட்டாய்!
விழிகள் நடித்து விட்டன
ஆனால் இதையமோ ஒவ்வொரு துடிப்பிலும்
கேட்கிறது மீண்டும் மகிழ்ச்சியாய் துடிப்பது எப்போதென்று?!

1 comment: