Saturday, October 24, 2009

காதலர்களின் பொய்கள் !




பிரிவின் தாக்கத்தின் போதும் ,
கண்கள் கலங்கும் போதும் ,
கண்ணில் தூசி விழுந்து விட்டது என்ற பொய் !
நினைவுகளின் தாக்கத்தால்
கனவுகளின் தொல்லையால்
விழித்திருந்துவிட்டு
தூக்கமில்லை என்ற பொய் !
சண்டை சச்சரவுகளில் இருந்துவிட்டு ,
ஏன் சோகமாய் இருகிறாய் என்று கேட்கும் தோழியிடம் ,
மனசு சரி இல்லை என்ற பொய் !
எத்தனை பொய்கள் தான் கூறுவாய்
என்று கேட்கும் மனதிடம்
என் காதலை மறக்கும் வரை
என்று மனதிடமும் பொய் !
காதல் மெய்யாகும் போது
பொய்களும் மெய்யாகுமே !

Monday, October 19, 2009

நட்பு !காதல் !




முன்னுரை இன்றி தோன்றும் காதலுக்கும் ,
முன்னுரையோடு தோன்றும் நட்புக்கும் ,
வேறுபாடு ஒன்று மட்டுமே !
காதல் முடிவுரை ஆனால் நட்பின் முகவரி தோன்றும் .
நட்பு முடிவுரை ஆனால் ஆயுளின்
முகவரியே தொலைந்து விடும்!!

Sunday, October 11, 2009

விமான பயணம்!



முதல் முறையாய் பூமியை கண்டேன்
பல வண்ணங்களில்
நான் உன்னுள் இருந்த போது!
என் செவிகளும் செயல் இழப்பதை உணர்ந்தேன்
பூமியை விட்டு பிரிந்து சென்ற போது!
விண்ணில் பறப்பது போன்ற உணர்ச்சி
உன்னுள் இருந்த அந்த சில நொடிகள் !
வாழ்வை இன்னும் அழகாய் மாற்றிய தருணம் அவை !
என்றும் மாறாத முத்திரையாய் பதிந்தது
என் முதல் விமான பயணம் !

இயற்கையின் அழகு !




யாரும் இல்லாத அமைதியான சாலை ,
மௌனத்தை கலைக்கும் வண்ணம்
சாலையில் ஊடுருவிய வாகன சப்தம் !
ஜன்னலை மூட மனம் இல்லை
தென்றலின் ஸ்பரிசத்தில் லயித்து போனதால் !
பௌர்ணமி ஆன அன்று ,
ஹய்யோ இதுவரை நான் பார்த்திடாத அழகை கண்டேன் நிலவில் !
ஒளியற்ற புல்வெளியை சூரியன்
மெருகூட்டுவது போல
அந்த மௌனமான சாலையை
மெருகூட்டியது வாகனத்தின் ஒளி!
சற்றும் எதிர் பார்க்காத வண்ணம்
மேகம் என்னை காண துடித்ததினால்
மழையை தூதாக அனுப்பியது !!
ஆகா மழை தான் எத்தனை அழகு ?!
சாலை ஓர மரங்களின் ஓயா நடனத்தின் அழகு தான் எத்தனை?!
இவற்றின் அபிநயத்தில் தொலைத்தேன் என்னை
என்னை மட்டும் அல்ல என்னில் இருந்த பாரங்களையும் தான் !!

Monday, September 28, 2009

Take care




Three things in life that, once gone, never come back -

(1)- Time
(2)- Embedded Words
(3)- Opportunity

Three things in life that may never be lost -

(1)- Peace
(2)- Hope
(3)- Honesty

Three things in life that are most valuable -

(1)- Love
(2)- Self-confidence
(3)- Friends

Three things in life that are never certain -

(1)- Dreams
(2)- Success
(3)- Fortune

Three things that make a man/woman -

(1)- Hard work
(2)- Sincerity
(3)- commitment

Three things in life that can destroy a man/woman -

(1)- Alcohol
(2)- Pride
(3)- Anger

Three things in life that, once lost, hard to build-up -

(1)- Respect
(2)- Trust
(3)- Friendship

Three things in life that never fail -

(1)- True love
(2)- Determination
(3)- Belief

Take care of these things ..

Thursday, September 24, 2009

இயலாமை !



நிதமும் உன்னை பார்க்கிறேன் ,
பொழுது தவறாமல் !
நீ துயிலுவதில் இருந்து
அதிகாலையில் எழும் வரை
உன்னை காண்கிறேன் !
என்னில் விழும் முதல் பிம்பம்
உன்னுடையதுதான் !
என் இயலாமையை மீறியும்
உன்னை கட்டி அனைக்கதோன்றும்
அழகாய் என் முன்னிலையில்
நீ நிற்கும் பொழுது !
உன் கலைந்த கூந்தலின் அசைவுகள் ,
உன் வேடிக்கையான நடன கூற்றுகள் ,
இவ்வளவு ஏன்??
நீ பாடுவதை கூட உணர்ந்திருக்கிறேன் !
நீ பிறரிடம் பேசமுடியாத கோடி சொற்களை ,
என் முன் வந்து பேசுவாய் ஆவேசமாய் ..
எனினும் என் செவிகள்
ஒரு போதும் மூடியதில்லை !!
ஏனோ என்னை விட்டு பிரிய
உன்னுள்ளே ஆயிரம் விண்ணப்பங்கள் ?
செல்வதற்கு முன் பலமுறை என் பார்வையில் விழுகிறாய் !!
இவைஅனைத்தையும் எண்ணி பெருமிதம் என்னுள்..
ஆனால்
நீ என்னிடம் வந்து கதறி அழுகையில் ,
என் கரங்களை நீட்டி உன்னை அணைக்க முடியவில்லையே
உன் கண்ணீரை அகற்ற ,ஆறுதலாக பேச துடித்தேன்
ஆனால் முடியவில்லையே!!
உன்னுடன் கைகோர்த்து நடக்க முடியாத ,
உயிரில்லாத ஒரு கேடயம் ஆனேனே ?!
ஏன்?!?
கண்ணாடியாக பிறந்ததனால் !!

அழுகுரல் !



பிறந்தேன் நானும் கெம்பீரமாய் ,
தாயின் ஸ்பரிசத்தில் ,
தந்தையின் அரவணைப்பில் ,
தொடர்ந்தது என் ஆயுட்காலம் ..
கண்டேன் வானவில்லை பலமுறை
அழகிய வண்ணங்களில் !
ஒருமுறை கூட என் ஆடையில்
வண்ணங்களை கண்டதில்லை ..
நடைபிணமாக திரிந்தேன் !
செவியில் குப்பைத்தொட்டியின் பெருமிதக் குரல்
ஓரமாக என்னை சுற்றி இத்தனை இழைகள் என !!
அப்பொழுது தான் இரு தினங்கள் உண்ணாமல் ஓய்ந்ததை உணர்ந்தேன் !!
வீட்டு ஜன்னல்களில் ஆயிரம் சட்டைகள் ,
கண்டேன் என் சட்டையில் ஆயிரம் ஜன்னல்களை !
மனதில் கட்டினேன் ஆயிரம்கோடி கனவுகள்
வறுமை கட்டியது என் கனவுகளை !!
சிறகு முளைத்து பறக்க ஆசைதான்
என் ஏழ்மை என்னைவிட்டு பறந்தால் !!
வேண்டுவது ராஜாங்க வாழ்வை அல்ல
வாழ்வை போராட்டமாக அல்லாமல் ,
உணர்ந்து வாழ ஒரு வறுமை இல்லாத வாழ்வை மட்டுமே !!
--ஒரு ஏழை சிறுவனின் அழுகுரல்